WhatsApp Image 2021 11 01 at 9.00.19 PM
செய்திகள்அரசியல்இலங்கை

சுமந்திரன் சுட்ட தோசை – உண்டு மகிழ்ந்த மீனவர்கள்!!!!!

Share

இந்திய மீனவர்களின் பிரச்சனை தொடர்பாகவும், அவர்களால் ஏற்பட்ட பாதிப்புகள் தொடர்பாகவும் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே உடன் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எ.சுமந்திரன் தலைமையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

றோலர் தொழிலிற்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட போராட்டத்தின் எதிரொலியாக குறித்த சந்திப்பு இன்றைய தினம் கொழும்பிலுள்ள இந்திய உயர் ஸ்தானிகர் அலுவலகத்தில் இடம்பெற்றுள்ளது.

குறித்த கலந்துரையாடல், மாகாணசபை முன்னாள் உறுப்பினர் சந்திரலிங்கம் சுகிர்தனின் ஒழுங்குபடுத்தலில் மீனவர்கள் சார்பான பிரதிநிதிகள் N.V. சுப்பிரமணியம் – தலைவர் வடமாகாண கடல் தொழிலாளர் இணையம், J. பிரான்சிஸ் – உப தலைவர் வடமாகாண கடல் தொழிலாளர் இணையம், A.மரியராசா-பொருளாளர் வடமாகாண கடல் தொழிலாளர் இணையம், அன்ரனி யேசுதாஸன் – தேசிய மீனவர் நல்லிணக்க வடக்கு கிழக்கு இணைப்பாளர்,V.அருள்நாதன் -தலைவர் முல்லைத்தீவு அண்னை வேளாங்கண்ணி கடல் தொழிலாளர் கூட்டுறவு சங்கம் ஆகியோர் இச் சந்திப்பில் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

 

குறித்த கலந்துரையாடலைத் தொடர்ந்து நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் வீட்டில் இடம்பெற்ற விருந்துபசாரத்திலும் மீனவ சங்க பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

மீனவ சங்க பிரதிநிதிகளுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தனது வீட்டில் தோசை சுட்டு வழங்கிய படங்கள் மற்றும் காணொலி தற்போது வெளியாகியுள்ளன.

WhatsApp Image 2021 11 01 at 9.00.20 PM WhatsApp Image 2021 11 01 at 9.00.21 PM 1

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 44
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தித்வா புயல் பாதிப்பு: இழப்பீடுகளை விரைவாக வழங்க பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய உத்தரவு!

தித்வா (Tithwa) புயலால் ஏற்பட்ட பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களுக்குரிய இழப்பீட்டுத் தொகையை எவ்விதத் தாமதமுமின்றி விரைவாக...

world 43
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மீண்டும் உயர்கிறதா மின் கட்டணம்? அதிகரிப்பைக் கோருகிறது தேசிய அமைப்பு இயக்குநரகம்!

இலங்கை மின்சார சபை (CEB) கலைக்கப்பட்ட பின்னர் உருவாக்கப்பட்ட அரசிற்குச் சொந்தமான தனியார் நிறுவனமான தேசிய...

world 42
செய்திகள்இலங்கைபிராந்தியம்

உள்ளூர் தொழில்களை வலுப்படுத்துவதே அரசாங்கத்தின் இலக்கு:  ஜனாதிபதி அநுரகுமார உறுதி!

உள்நாட்டுத் தொழில்களைப் பாதுகாப்பதும், அவற்றை வலுப்படுத்துவதுமே தற்போதைய அரசாங்கத்தின் முதன்மையான நோக்கமாகும் என ஜனாதிபதி அநுரகுமார...

world 41
செய்திகள்இலங்கை

இந்தியா – இலங்கை கடல்சார் உறவில் புதிய மைல்கல்: கொழும்பு கப்பல் கட்டும் தளத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்!

இந்தியா மற்றும் இலங்கை இடையிலான பொருளாதார மற்றும் வர்த்தக உறவுகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், கொழும்பு...