2 20
இலங்கைசெய்திகள்

பாலச்சந்திரன் மரணத்திற்கு காரணமானவரே தற்போது மனம் வருந்துகின்றார்: சிவஞானம் சிறீதரன்

Share

பாலச்சந்திரன் மரணத்திற்கு காரணமானவரே தற்போது மனம் வருந்துகின்றார்: சிவஞானம் சிறீதரன்

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனது இளைய மகன் பாலச்சந்திரனின் மரணத்திற்கு காரணமாக இருந்தவரே இன்று பல ஆண்டுகள் கழித்து மனம் வருந்துவதாக வாக்கு மூலம் கொடுத்திருக்கின்றார் என்று நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன்(S.Sritharan) தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி மத்திய கல்லூரியில் நிகழ்வொன்றில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,

“தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனது இளைய மகன் பாலச்சந்திரன் உயிரிழந்த செய்தி கேட்ட முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மிகவும் மன வருத்தம் அடைந்தார் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், பாலச்சந்திரன் உயிரிழந்த காலத்தில், மகிந்த ராஜபக்ச ஜனாதிபதியாகவும், கோட்டாபய ராஜபக்ச பாதுகாப்பு துறை செயலாளராகவும் இருந்தார்.

அவருக்கு பிஸ்கட் கொடுத்து இலங்கை இராணுவத்தினால் சுட்டுக்கொலைப்பட்டார். வெளிநாட்டு பத்திரிக்கைகளில் அவரின் மரணத்தை ஆய்வு செய்து செய்திகள் வெளிவந்துள்ளன.

வெகுகாலத்திற்கு பின்னர்தான் இந்த விடயங்கள் எமக்கு தெரியவந்துள்ளது” என குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
world 122
செய்திகள்உலகம்

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலை $100-ஐத் தாண்டியது: ஹோர்முஸ் ஜலசந்தியை முற்றுகையிடுகிறது அமெரிக்கா!

ஈரானுடனான அமைதிப் பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, ஹோர்முஸ் ஜலசந்தி (Strait of Hormuz) வழியாகச் செல்லும்...

world 121
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இன்று மாலை நாட்டின் பல பகுதிகளில் கனமழை: பொதுமக்கள் அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை!

இலங்கையின் பெரும்பாலான பகுதிகளில் இன்று (ஏப்ரல் 13, 2026) பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழை...

world 120
செய்திகள்உலகம்

லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்: அவசர உதவிகளை அறிவித்தது ஈராக்!

லெபனான் மீது இஸ்ரேல் நடத்திய சமீபத்திய தாக்குதல்களைத் தொடர்ந்து, ஈராக் பிரதமர் முகமது ஷியா அல்-சுடானி,...

world 119
செய்திகள்இலங்கைபிராந்தியம்

புத்தாண்டு வழிபாட்டிற்காக நாளை இரவு முழுவதும் திறக்கப்படும் ருவன்வெலி மகா சேயா!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு ஆசிகளைப் பெற வரும் பக்தர்களுக்காக, அனுராதபுரத்தில் உள்ள வரலாற்றுச்...