1 14
இலங்கைசெய்திகள்

மின்சார தடையின் பின்னணி.!நாளை வெளியாகவிருக்கும் முக்கிய அறிவிப்பு

Share

மின்சார தடையின் பின்னணி.!நாளை வெளியாகவிருக்கும் முக்கிய அறிவிப்பு

நாடு முழுவதும் இன்று (09) ஏற்பட்ட மின்வெட்டு தொடர்பான விரிவான தகவல்களை இலங்கை மின்சார சபை நாளை (10) வெளியிடும் என்று அதன் தவிசாளர் திலக் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் குறித்து மின்சார சபையின் உள்ளக குழு விசாரணை நடத்தவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்தோடு, மின்சார தடை தொடர்பான விரிவான விசாரணையை மின்சக்தி அமைச்சும் மேற்கொண்டு வருவதாக எரிசக்தி அமைச்சின் செயலாளர் உதயங்க ஹேமபால கூறியுள்ளர்.

இது போன்ற நிலைமை மீண்டும் ஏற்படாமல் தடுக்க தேவையான நடவடிக்கைகளை பரிந்துரைக்க தொடர்புடைய விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இறுதியாக 2023 டிசம்பர் 9 ஆம் திகதி நாடு முழுவதும் மின்சார தடை ஏற்பட்டிருந்த நிலையில், இன்றையதினம் அதேபோன்ற சம்பவமொன்று இடம்பெற்றிருந்தது.

இவ்வாறனாதொரு பின்னணியில், இன்று ஏற்பட்ட மின்சார தடைக்கு கொத்மலையிலிருந்து பியகம வரையிலான மின்சார விநியோகக் கம்பியில் ஏற்பட்ட கோளாறுதான் காரணம் என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், நாளை மீண்டும் இது தொடர்பான விரிவான விளக்கம் வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
k d
இலங்கை

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை.

இலங்கை மக்களுக்கு பலத்த காற்று தொடர்பான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மத்திய, சப்ரகமுவ, வடமத்திய மற்றும் வடமேல்...

G.L.Peiris
இலங்கை

அனைத்து மக்களும் ஒன்றிணைந்தால் சாத்தியம் என்கிறார் முன்னாள் அமைச்சர் ஜி.எல்.பீரிஸ்

கூட்டு எதிரணியின் அரசியல் பிரமுகர்கள் சர்வமதத் தலைவர்களைச் சந்தித்து கலந்துரையாடி வருகின்றனர், இந்த நிலையில் இது...

dengue
இலங்கை

அதி அபாய மட்டத்தில் டெங்கு – பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை.

2026 ஆம் வருடத்தில் இதுவரை பதிவான டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை 68,071 ஆக பதிவாகி உள்ளதாக...

money
இலங்கை

அதிரடியாக உயர்த்தப்பட்ட சில கட்டணங்கள்.

  வர்த்தகம், வாணிபம், உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க ,...