6 13
இலங்கைசெய்திகள்

அநுர வசிக்கும் வீடு..! நாட்டை இயக்கும் மறைகரத்தை கூறும் அரசியல்வாதி

Share

அநுர வசிக்கும் வீடு..! நாட்டை இயக்கும் மறைகரத்தை கூறும் அரசியல்வாதி

நாட்டின் முக்கிய தீர்மானங்களை மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா தனது காலை உணவின் போது மேற்கொள்வதாக பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

யூடியூப் தளமொன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.

அத்துடன், ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க பெலவத்தையில் தொடர்மாடி கட்டிடமொன்றில் உள்ள ஒரு சொகுசு வீட்டில் வசிப்பதாக கம்மன்பில குறிப்பிட்டுள்ளார்.

மேலும், டில்வின் சில்வாவின் வீடும் அதே தொடர்மாடி கட்டிடத்தில் இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதிகள் காலத்திலும் வீடுகளில் அமைச்சரவை முடிவுகள் எடுக்கப்பட்டதை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் வீட்டில் அவரின் சகோதரர்களான கோட்டாபய ராஜபக்ச மற்றும் பசில் ராஜபக்ச ஆகியோர் இணைந்து நாட்டின் தீர்மானங்களை எடுத்ததை அவர் உதாரணமாக காட்டியுள்ளார்.

மேலும், ஒரு நாட்டின் அரசாங்கம் ஒரு கட்சியை சார்ந்து இருக்கும் எனவும் இடதுசாரி ஆட்சி உள்ள ஏனைய நாடுகளில் அரசாங்கத்தின் தலைமைப் பொறுப்பு குறித்த கட்சியின் பொதுச் செயலாளரிடமே இருக்கும் எனவும் கம்மன்பில கூறியுள்ளார்.

Share
தொடர்புடையது
25 68391c518038f
இலங்கைசெய்திகள்

அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தம் ஒன்றில் விரைவில் கைச்சாத்திடும் இலங்கை

அமெரிக்கா, இலங்கை மீது விதித்த கட்டணக் கொள்கைகளை மாற்றியமைப்பதற்கான, இரண்டாவது உயர்மட்டக் கலந்துரையாடல் நேற்று வோசிங்டனில்...

25 6839329e68755
உலகம்செய்திகள்

அமெரிக்காவின் சிறப்பு தூதர் முன்கொணர்ந்த ஒப்பந்தம்: ஏற்றுக்கொள்வதாக அறிவித்துள்ள இஸ்ரேல்

ஹமாஸ் அமைப்புக்கு எதிரான போரை நிறுத்துவது தொடர்பாக அமெரிக்காவின் சிறப்பு தூதர் விட்காப் முன்கொணர்ந்த ஒப்பந்தத்தை...

25 68392050e9f7e
இலங்கைசெய்திகள்

மீண்டும் 16 பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளுக்கு உடனடி இடமாற்றம்!

நாடு முழுவதும் உள்ள பொலிஸ் நிலையங்களின் 16 பொறுப்பதிகாரிகளுக்கு, உடனடி இடமாற்றங்களை இலங்கை பொலிஸ் தலைமையகம்...

25 68392036c28da
இலங்கைசெய்திகள்

சீரற்ற காலநிலை: நாட்டு மக்களுக்கு இலங்கை மின்சார சபை விடுத்துள்ள அறிவிப்பு

நாட்டின் பல பகுதிகளில் சீரற்ற காலநிலை நீடித்து வருகிறது. இந்த நிலையில் நாட்டின் பல பகுதிகளில்...