4 14
இலங்கைசெய்திகள்

நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் மீது தாக்குதல்

Share

நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் மீது தாக்குதல்

இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் முகம்மது சாலி நழீம் மீது தாக்குதல் ஒன்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த தாக்குதல் இன்று(08.02.2025) காலை ஏறாவூர் பொலிஸ் நிலையத்துக்கு அருகில் நடத்தப்பட்டுள்ளது.

தாக்குதலில் காயமடைந்த நாடாளுமன்ற உறுப்பினர், ஏறாவூர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக முகமது சாலி நழீம் தெரிவிக்கையில்,

“அரசியல் பிரச்சனை காரணமாக பள்ளிவாசல் ஒன்றின் முன்னாள் எனது தந்தை மீதும் சகோதரர் மீதும் இன்று அதிகாலை 6.00 மணியளவில் கலீல் என்பர் தாக்குதல் மேற்கொண்டார்.

இதனால் காயமடைந்த சகோதரன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதையடுத்து, காலையில் கொழும்பில் இருந்து வந்த நான் வைத்தியசாலைக்கு சென்றிருந்தேன்.

ஸ்ரீ லங்கா மக்கள் கட்சி ஆதரவாளர் காதர் என்பவர் வைத்தியசாலையில் வைத்து என்னை தரக்குறைவான வார்தைகளால் பேசினார்.

இதனையடுத்து நான் பொலிஸ் நிலையத்துக்கு சென்று வாகனத்தைவிட்டு இறங்கி சென்ற போது பின்னால் வந்த காதர், என்மீது மோட்டார் சைக்கிள் தலைக்கவசத்தால் தாக்கினார்.

பொலிஸ் நிலையத்துக்குள்ளும் அவர் என்னை தாக்க முற்பட்டபோது பொலிஸார் வேடிக்கை பார்த்துக் கொண்டு நின்றனர்” எனக் கூறியுள்ளார்.

இதேவேளை, இந்த சம்பவம் தொடர்பாக பொலிஸார், ‘அப்படி ஒன்றும் நடக்கவில்லை’ என தெரிவித்துள்ளனர். இந்நிலையில், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

Share
தொடர்புடையது
india 17
உலகம்செய்திகள்

பாகிஸ்தான் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் பயணித்த அனைவரும் பலி

பாகிஸ்தான் ராணுவத்திற்குச் சொந்தமான ‘Mi-17’ ரக ஹெலிகாப்டர் ஒன்று, பாகிஸ்தான் நிர்வாகத்தின் கீழுள்ள காஷ்மீரின் முசாபராபாத்...

india 16
உலகம்செய்திகள்

சூரியப் புயல்களில் இருந்து பூமியைப் பாதுகாக்க விண்வெளியில் செயற்கை பிளாஸ்மா கவசம்: விஞ்ஞானிகள் புதிய திட்டம்

சூரியனில் இருந்து வெளியாகும் சக்திவாய்ந்த சூரியப் புயல்கள் (Solar Storms) மற்றும் புவிக்காந்தப் புயல்களினால் பூமியில்...

india 15
உலகம்செய்திகள்

போலி உரிமம் மூலம் 17 ஆண்டுகள் பயணிகள் விமானத்தை இயக்கிய ஏர் கனடா கேப்டன் கைது

ஏர் கனடா (Air Canada) விமான சேவை நிறுவனத்தில் போலி உரிம ஆவணங்களைப் பயன்படுத்தி, சுமார்...

india 13
அரசியல்இலங்கைசெய்திகள்

சர்ச்சைக்குரிய மரணங்கள் மற்றும் குற்றச்சாட்டுகள் குறித்து முறையான விசாரணை: நாடாளுமன்றத்தில் அமைச்சர் ஆனந்த விஜேபால உறுதி

கடந்த காலங்களில் நாட்டில் இடம்பெற்ற சர்ச்சைக்குரிய மரணங்கள் மற்றும் மக்கள் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவங்கள் உள்ளிட்ட...