5 13
இலங்கைசெய்திகள்

பெற்றோலால் லீற்றருக்கு 120 ரூபா பெற்றுக்கொள்ளும் அநுர! சம்பிக்க ரணவக்க குற்றச்சாட்டு

Share

பெற்றோலால் லீற்றருக்கு 120 ரூபா பெற்றுக்கொள்ளும் அநுர! சம்பிக்க ரணவக்க குற்றச்சாட்டு

ஒவ்வொரு பெற்றோல் லீற்றரிலும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க 120 ரூபா பெற்றுக்கொள்வதாக முன்னாள் அமைச்சர் பாடலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

ஒவ்வொரு டீசல் லீற்றரிலும் பிரதமர் ஹரினி அமரசூரிய 90 ரூபா பெற்றுக்கொள்வதாக மேலும் குற்றம் சுமத்தியுள்ளார்.

இந்த தொகையில் ஒரு பகுதியை மக்களுக்கு வழங்குமாறு கோருவதற்கு தற்போதைய ஜனாதிபதிக்கு முடியாது எனவும் குற்றம் சுமத்தியுள்ளார்.

மேலும், எமது ஆட்சியில் லீற்றர் ஒன்று 95 ரூபா செலுத்தியவர்கள் தற்பொழுது 280 ரூபாவிற்கு டீசல் விற்பனை செய்து கொண்டு நீங்கள் என்ன செய்தீர்கள் என கேள்வி எழுப்புவதாகத் தெரிவித்துள்ளார்.

இந்த நாட்டை ஸ்திரதப்படுத்தியது தாங்களே என அவர்கள் கூறுகின்றார்கள்.

தேர்தல் மேடைகளில் அநுரகுமார திசாநாயக்க மற்றும் ஹரினி அமரசூரிய சத்தியம் செய்தது போன்று செய்திருந்தால் இன்று வரிசை யுகம் உருவாகியிருக்கும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த ஆட்சியாளர்களும் ரணில் விக்ரமசிங்க செய்ததையே செய்கின்றார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், வெட்டிப் பேச்சு பேசுவோரினால் இந்த நாட்டை கட்டியெழுப்ப முடியாது என சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
world 53
செய்திகள்உலகம்

மத்திய கிழக்கு போர்நிறுத்தம்: ஜெருசலேமின் புனிதத் தலங்கள் மீண்டும் திறப்பு!

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள தற்காலிக போர்நிறுத்தத்தைத் தொடர்ந்து, ஜெருசலேமில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க புனிதத் தலங்கள்...

world 52
செய்திகள்இலங்கை

பெண் எம்.பி.க்களை இழிவுபடுத்துவோர் மீது நடவடிக்கை தேவை: சபாநாயகர் மீது சபை முதல்வர் பிமல் ரத்நாயக்க குற்றச்சாட்டு!

நாடாளுமன்றில் பெண் பாராளுமன்ற உறுப்பினர்களைக் குறிவைத்து, கௌரவத்திற்கு ஒவ்வாத மற்றும் அவதூறான மொழியைப் பயன்படுத்தும் எதிர்க்கட்சி...

world 51
செய்திகள்இந்தியா

இந்தியாவில் 24 நாட்களுக்குத் தேவையான நிலக்கரி கையிருப்பு: அரசு அதிகாரி தகவல்!

இந்தியாவின் சுரங்கங்கள் மற்றும் மின் உற்பத்தி நிலையங்களில், தொடர்ந்து 24 நாட்களுக்கு மின்சாரம் உற்பத்தி செய்வதற்குத்...

world 50
செய்திகள்உலகம்

ஈரான் உடன்படிக்கையை மீறினால் கடும் இராணுவ நடவடிக்கை: ‘ட்ரூத் சோஷியல்’ தளத்தில் டிரம்ப் எச்சரிக்கை!

அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே எட்டப்பட்டுள்ள உடன்படிக்கையைத் தெஹ்ரான் முழுமையாகக் கடைப்பிடிக்கும் வரை, அமெரிக்கப் படைகள் ஈரானைச்...