5 13
இலங்கைசெய்திகள்

பெற்றோலால் லீற்றருக்கு 120 ரூபா பெற்றுக்கொள்ளும் அநுர! சம்பிக்க ரணவக்க குற்றச்சாட்டு

Share

பெற்றோலால் லீற்றருக்கு 120 ரூபா பெற்றுக்கொள்ளும் அநுர! சம்பிக்க ரணவக்க குற்றச்சாட்டு

ஒவ்வொரு பெற்றோல் லீற்றரிலும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க 120 ரூபா பெற்றுக்கொள்வதாக முன்னாள் அமைச்சர் பாடலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

ஒவ்வொரு டீசல் லீற்றரிலும் பிரதமர் ஹரினி அமரசூரிய 90 ரூபா பெற்றுக்கொள்வதாக மேலும் குற்றம் சுமத்தியுள்ளார்.

இந்த தொகையில் ஒரு பகுதியை மக்களுக்கு வழங்குமாறு கோருவதற்கு தற்போதைய ஜனாதிபதிக்கு முடியாது எனவும் குற்றம் சுமத்தியுள்ளார்.

மேலும், எமது ஆட்சியில் லீற்றர் ஒன்று 95 ரூபா செலுத்தியவர்கள் தற்பொழுது 280 ரூபாவிற்கு டீசல் விற்பனை செய்து கொண்டு நீங்கள் என்ன செய்தீர்கள் என கேள்வி எழுப்புவதாகத் தெரிவித்துள்ளார்.

இந்த நாட்டை ஸ்திரதப்படுத்தியது தாங்களே என அவர்கள் கூறுகின்றார்கள்.

தேர்தல் மேடைகளில் அநுரகுமார திசாநாயக்க மற்றும் ஹரினி அமரசூரிய சத்தியம் செய்தது போன்று செய்திருந்தால் இன்று வரிசை யுகம் உருவாகியிருக்கும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த ஆட்சியாளர்களும் ரணில் விக்ரமசிங்க செய்ததையே செய்கின்றார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், வெட்டிப் பேச்சு பேசுவோரினால் இந்த நாட்டை கட்டியெழுப்ப முடியாது என சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
பேராசிரியர் சரத் அபேகோன்
இலங்கை

ஜனாதிபதிக்கு பறந்த பதவி விலகல் கடிதம்.

தமது பதவியிலிருந்து விலகுவதாக மத்திய மாகாண ஆளுநர் பேராசிரியர் சரத் அபேகோன், பதவி விலகல் குறித்த...

are 2
இலங்கை

முன்னாள் மாகாண சபை உறுப்பினர் கைது.

முன்னாள் மாகாண சபை உறுப்பினருமான ஜெயலத் பண்டார திசாநாயக்க, நிதி மோசடி குற்றச்சாட்டு தொடர்பாக கைது...

j poretest d
இலங்கை

மாநகர சபைக்குள் நுழைய வேண்டிய நிலை உருவாகும் – அதற்கு முன் விரைந்து நடவடிக்கை எடுங்கள்!

யாழ்ப்பாணம் – காக்கை தீவு மக்கள் மாநகர சபைக்கு முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அங்கு...

arested 1
இலங்கை

வெளிநாட்டில் இருந்து வருகை தருவோரை இலக்குவைத்து நடத்தப்படும் சம்பவம்.

திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய இருவர் நேற்றைய தினம் யாழ். மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்....