இலங்கைசெய்திகள்

மகா கும்பமேளாவில் அடுத்தடுத்து தீ விபத்துகள் : தெய்வாதீனமாக உயிர் பிழைத்த பக்தர்கள்

Share

மகா கும்பமேளாவில் அடுத்தடுத்து தீ விபத்துகள் : தெய்வாதீனமாக உயிர் பிழைத்த பக்தர்கள்

உத்தரப்பிரதேசத்தின் (Uttar Pradesh) – மகா கும்பமேளா நடைபெறும் பகுதியில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இன்று (07) காலை முகாம் 18வது முகாமில் ஏற்பட்ட தீ விபத்தில் எந்த உயிர் சேதமும் ஏற்படவில்லை என்று காவல்துறையினரால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மேலும் தெரியவருகையில், “12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் மகா கும்பமேளா ஜனவரி 13ஆம் திகதி ஆரம்பமாகி மகா சிவராத்திரி நாளான 26ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

இந்த ஆன்மிக நிகழ்வில் உலகம் முழுவதும் இருந்து வரும் கோடிக்கணக்கான பக்தர்கள் நீராடிச் செல்கின்றனர்.

இந்த நிலையில், மகா கும்பமேளாவின் சத்நாக் கேட் காவல் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் இன்று காலை திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

திறந்தவெளியில் அமைக்கப்பட்டிருந்த 20க்கும் மேற்பட்ட கூடாரங்களில் தீ பரவியதால் பரபரப்பு ஏற்பட்ட நிலையில் உடனடியாக அங்கிருந்த பக்தர்களை வெளியேற்றி, தீயை அணைக்கும் பணியில் தீயணைப்புத் துறையினர் ஈடுபட்டனர்.

சில மணிநேர போராட்டத்துக்கு பிறகு தீ அணைக்கப்பட்டதாகவும் தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் ஏற்கனவே ஜனவரி மாதத்தில் இரண்டு முறை கும்பமேளா பகுதியில் தீ விபத்து ஏற்பட்டதாகவும் அந்த விபத்துக்களிலும் எவ்வித உயிர் சேதமும் ஏற்படவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை கடந்த 29 ஆம் திகதி கும்பமேளாவில் புனித நீராட கோடிக்கணக்கான பக்தர்கள் கூடிய போது திரிவேணி சங்கமத்தில் ஏற்பட்ட கூட்டநெரிசலில் சிக்கி 30 பக்தர்கள் பலியாகியதுடன் 60க்கும் மேற்பட்டோர் காயமடைந்தமை குறிப்பிடத்தக்கது.

 

Share
தொடர்புடையது
articles2FeEKtDKWyXj0ebdxP7pcx
செய்திகள்உலகம்

வரலாற்று வெற்றி: அமெரிக்காவிடமிருந்து மீட்கப்படும் 3 பழைமைவாய்ந்த சோழர் காலச் சிலைகள்!

தமிழகத்தின் பல்வேறு ஆலயங்களில் இருந்து திருடப்பட்டு அமெரிக்காவிற்குக் கடத்தப்பட்ட மிகவும் பழைமைவாய்ந்த மூன்று சோழர் காலச்...

image 3a35841713
செய்திகள்இலங்கை

இலங்கையின் சுகாதாரத் துறையில் புதிய திருப்பம்: அனைத்துத் தொழிற்சங்கங்களும் ஒரே குழுவாக ஒன்றிணைந்து செயற்பட இணக்கம்!

அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் நிறைவேற்று சபைக்கும் அனைத்து சுகாதார தொழிற்சங்கங்களுக்கும் இடையிலான கலந்துரையாடல் ஒன்று...

rajith
செய்திகள்இலங்கை

ராஜித சேனாரத்ன மீதான ஊழல் வழக்கு: விசாரணையின் முன்னேற்ற அறிக்கையைச் சமர்ப்பிக்க நீதிமன்றம் உத்தரவு!

மீன்பிடித் துறைமுக மணல் அகழ்வுத் திட்டத்தில் அரசாங்கத்திற்குப் பாரிய நட்டத்தை ஏற்படுத்தியதாகக் கூறப்படும் ஊழல் வழக்குத்...

images 1 8
செய்திகள்இலங்கை

சதொச வெள்ளைப்பூண்டு மோசடி: முன்னாள் விநியோக முகாமையாளர் உட்பட 3 பேர் கைது – பிணையில் விடுதலை!

2021 ஆம் ஆண்டு லங்கா சதொச நிறுவனத்தின் வெள்ளைப்பூண்டு கையிருப்பினை விற்பனை செய்ததில் அரசாங்கத்திற்கு 17...