6 10
இலங்கைசெய்திகள்

அரிசி விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

Share

உள்நாட்டு அரிசி வகைகள் அனைத்தினதும் சில்லறை விலை உயர்வடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

சிவப்பு பச்சை அரிசியின் விலை 18 ரூபாவினால் உயர்த்தப்பட்டுள்ளதாக ஹெக்டர் கொப்பாகடுவ விவசாய ஆய்வு மற்றும் பயிற்சி நிறுவனம் வெளியிட்டுள்ள உணவு விலை பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் 2024-2025 பெரும்போக அறுவடை ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் அனைத்து நெல் வகைகளினதும் விலைகள் வீழ்ச்சியடைந்துள்ளன.

விநியோகம் குறைவடைந்துள்ள காரணத்தினால் நாடு அரிசியின் விலை 4 முதல் 5 வீதத்தினால் உயர்வடைந்துள்ளது.

நாடு அரிசி ஒரு கிலோ கிராம் 230 முதல் 240 ரூபா வரையில் விற்பனை செய்யப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் சம்பா மற்றும் சிவப்பு பச்சை அரிசி வகைகளுக்கு சந்தையில் தட்டுப்பாட:டு நிலை நிலவி வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த ஆண்டுடன் ஒப்பீடு செய்யும் போது நாடு அரிசியின் மொத்த விற்பனை விலை உயர்வடைந்துள்ளதாகவும், சிவப்பு அரிசியின் சில்லறை விலை அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Share
தொடர்புடையது
TNA
இலங்கை

சி.வி.கே.சிவஞானத்தின் வீட்டிற்கு வந்த சங்கு.

இலங்கைத் தமிழரசுக் கட்சி மற்றும் ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் தலைவர்களுக்கிடையில் முக்கிய கலந்துரையாடல் ஒன்று...

sumanthiran
இலங்கை

சுமந்திரன் வேண்டாம் – வெடித்தது போராட்டம்.

நாளைய தினம், சுழிபுரம் விக்டோரியா கல்லூரியின் 150வது ஆண்டு விழாவினை முன்னிட்டு நடைபெறவுள்ள நடைபவனிக்கு சட்டத்தரணி...

selvam
இலங்கை

தமிழ் மற்றும் முஸ்லீம் கடசிகள் ஒன்றிணைவு – சொற்போரில் ஈடுபட்டுள்ள இராமலிங்கம் சந்திரசேகர் மற்றும் செல்வம் அடைக்கலநாதன்

தமிழ் மற்றும் முஸ்லிம் கட்சிகளை ஒன்றிணைத்து புதிதாக உருவாக்கப்பட்டுள்ள கூட்டமைப்பை கூட்டுச் சாம்பார் என்றும், இது...

இலங்கை

மின்னல் தாக்கத்தினால் பலியாவோரின் எண்ணிக்கை அதிகரிப்பு.

ஆண்டுதோறும் 50க்கும் மேற்பட்டோர், நாட்டில் மின்னல் தாக்கங்களால் உயிரிழப்பதாக இன்று கொழும்பில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சி...