11 1
இலங்கைசெய்திகள்

மகிந்தவிற்கு இல்லம் வழங்க அனுமதியளித்த கூட்டத்தில் அநுர

Share

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிற்கு விஜேராம இல்லத்தை வழங்குவதற்கு அனுமதி வழங்கிய கூட்டத்தில் தற்போதைய ஜனாதிபதி அனுரகுமார திநாநாயக்கவும் பிரசன்னமாகியிருந்தார் என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

நல்லாட்சி அரசாங்க ஆட்சிக் காலத்தில் இந்த இல்லத்தை வழங்குவது குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.

இந்தக் கூட்டத்தில் முன்னாள் ஜனாதிபதிகளான மைத்திரிபால சிறிசேன, சந்திரிக்காக பண்டாரநாயக்க குமாரதுங்க உள்ளிட்டவர்களுடன் தற்போதைய ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவும் பங்கேற்றிருந்தார் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அண்மையில் கொழும்பில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் முன்னாள் ஜனாதிபதி ரணில் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வீடு வழங்குவதற்கு அரசாங்கம் சட்ட ரீதியாக கடப்பாடுடையது என குறிப்பிட்டுள்ளார்.

தற்போதைய ஜனாதிபதி பங்கேற்ற கூட்டமொன்றில் மஹிந்த ராஜபக்சவின் இல்லம் குறித்து தீர்மானம் எடுக்கப்பட்டதாகவும் இது சட்ட ரீதியான தீர்மானம் எனவும் ரணில் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
05 13
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பண்டிகைக் காலத்தில் இணைய மோசடிகள் அதிகரிப்பு: எச்சரிக்கையுடன் இருக்குமாறு இலங்கை கணினி அவசர பிரிவு அறிவுறுத்தல்!

எதிர்வரும் பண்டிகைக் காலங்களை முன்னிட்டு, இணையத்தில் பகிரப்படும் போலியான விளம்பரங்கள் மற்றும் இணைப்புகள் (Links) மூலம்...

04 12
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையின் சுற்றுலாத்துறை வளர்ச்சி: 2026-ஆம் ஆண்டில் 600,000 சுற்றுலாப் பயணிகளைக் கடந்த சாதனை!

இலங்கையின் சுற்றுலாத்துறை இந்த ஆண்டின் ஆரம்பத்திலேயே பெரும் வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. இலங்கை சுற்றுலா அபிவிருத்தி...

03 13
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையின் பல பகுதிகளில் இன்றும் மழை பெய்ய வாய்ப்பு: வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!

இலங்கையின் வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள புதிய வானிலை அறிக்கையின்படி, இன்று (மார்ச் 13) நாட்டின் பல...

02 12
செய்திகள்உலகம்

பனிமலை ஏறும் போது நிலைதடுமாறி சரிந்த மலையேற்ற வீரர்: வைரலாகும் திக் திக் காட்சிகள்

உலகின் மிக உயரமான சிகரங்களை நோக்கிய மலையேற்றப் பயணங்கள் சாகசம் நிறைந்ததாக இருந்தாலும், அவை எந்த...