11 1
இலங்கைசெய்திகள்

மகிந்தவிற்கு இல்லம் வழங்க அனுமதியளித்த கூட்டத்தில் அநுர

Share

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிற்கு விஜேராம இல்லத்தை வழங்குவதற்கு அனுமதி வழங்கிய கூட்டத்தில் தற்போதைய ஜனாதிபதி அனுரகுமார திநாநாயக்கவும் பிரசன்னமாகியிருந்தார் என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

நல்லாட்சி அரசாங்க ஆட்சிக் காலத்தில் இந்த இல்லத்தை வழங்குவது குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.

இந்தக் கூட்டத்தில் முன்னாள் ஜனாதிபதிகளான மைத்திரிபால சிறிசேன, சந்திரிக்காக பண்டாரநாயக்க குமாரதுங்க உள்ளிட்டவர்களுடன் தற்போதைய ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவும் பங்கேற்றிருந்தார் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அண்மையில் கொழும்பில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் முன்னாள் ஜனாதிபதி ரணில் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வீடு வழங்குவதற்கு அரசாங்கம் சட்ட ரீதியாக கடப்பாடுடையது என குறிப்பிட்டுள்ளார்.

தற்போதைய ஜனாதிபதி பங்கேற்ற கூட்டமொன்றில் மஹிந்த ராஜபக்சவின் இல்லம் குறித்து தீர்மானம் எடுக்கப்பட்டதாகவும் இது சட்ட ரீதியான தீர்மானம் எனவும் ரணில் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...