22 1
இலங்கைசெய்திகள்

திருமண நிகழ்வில் ஏற்பட்ட விபரீதம் – இரு குழுக்களுக்கு இடையில் கடும் மோதல்

Share

திருமண நிகழ்வில் ஏற்பட்ட விபரீதம் – இரு குழுக்களுக்கு இடையில் கடும் மோதல்

களுத்துறை, வஸ்கடுவ பிரதேசத்தில் உள்ள பிரபல ஹோட்டலொன்றில் நேற்று முன்தினம் நடைபெற்ற திருமண நிகழ்வில், இரு குழுக்களிடையே கடுமையான மோதல் ஏற்பட்டுள்ளது.

இது தொடர்பாக முறைப்பாடு கிடைத்துள்ளதாக களுத்துறை வடக்கு பொலிஸார் தெரிவித்தனர்.

மருத்துவர் ஒருவரின் திருமணத்தின் போது இந்த மோதல் ஏற்பட்டுள்ளது, மேலும் கலந்து கொண்டவர்களில் பெரும்பாலானோர் மருத்துவர்கள் என்று தெரிவிக்கப்படுகிறது.

தங்கள் நண்பரின் திருமணத்தின் போது மது அருந்திக்கொண்டிருந்த மருத்துவர்கள் குழு ஒன்று நடனமாடி மகிழ்ந்தனர்.

சிறிது நேரத்திலேயே அவர்களுக்கு இடையில் வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் வன்முறையாக மாறியமையால் மருத்துவர்கள் குழு மோதிக் கொண்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

திருமண விழாவில் கலந்து கொண்ட இரு தரப்பினரின் உறவினர்களும் அவர்களை கட்டுப்படுத்த முயற்சித்துள்ளனர்.

மோதலைத் தொடர்ந்து, இரு குழுக்களும் களுத்துறை வடக்கு பொலிஸ் நிலையம் சென்று முறைப்பாடு செய்துள்ளனர்.

மேலும் மோதலில் காயமடைந்த மருத்துவர்கள் சிலர் சிகிச்சைக்காக களுத்துறையில் உள்ள நாகோடா மருத்துவமனைக்குச் செல்வதாகக் பொலிஸ் நிலையத்திலிருந்து வெளியேறியதாக தெரிவிக்கப்படுகிறது.

Share
தொடர்புடையது
world 108
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தொழிலதிபர்களுக்கு விசேட எரிபொருள் ஒதுக்கீடு: அரசாங்கத்தின் புதிய திட்டம் குறித்து அறிவிப்பு!

இலங்கையிலுள்ள பெரிய மற்றும் நடுத்தர அளவிலான தொழிலதிபர்களின் கோரிக்கையை ஏற்று, அவர்களின் செயல்பாடுகளைத் தடையின்றி முன்னெடுப்பதற்காக...

world 107
செய்திகள்உலகம்

ஈரான் பேச்சுவார்த்தை முறிவு: கவலையின்றி UFC சண்டையைக் கண்டுகளித்த டொனால்ட் டிரம்ப்!

மத்திய கிழக்கில் அமைதியை ஏற்படுத்துவதற்காக ஈரானுடன் இஸ்லாமாபாத்தில் நடத்தப்பட்ட மிக முக்கியமான அமைதிப் பேச்சுவார்த்தைகள் எவ்வித...

world 106
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பூசா சிறையிலிருந்து வெலிசராவுக்கு மாற்றப்பட்ட 7 முக்கிய பாதாள உலகக் கும்பல் தலைவர்கள்!

இலங்கையில் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல்களைச் சேர்ந்த ஏழு முக்கிய தலைவர்கள், பூசா உயர் பாதுகாப்புச் சிறையிலிருந்து...

world 101
உலகம்செய்திகள்

அமெரிக்கா – ஈரான் பேச்சுவார்த்தை முறிவு: போர் நிறுத்தத்தைத் தொடர ஆஸ்திரேலியா வலியுறுத்தல்!

இஸ்லாமாபாத்தில் அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையே நடைபெற்ற அமைதிப் பேச்சுவார்த்தைகள் எவ்வித உடன்பாடும் இன்றி முடிவடைந்ததைத்...