6
இலங்கைஅரசியல்செய்திகள்

ஆலோசனை வழங்கவே ஞானசாரதேரர் நியமிப்பு! – ஜனாதிபதி பதிலடி

Share

ஒரே நாடு ஒரே சட்டம் என்ற எண்ணக்கருவை உருவாக்குவதற்கு ஜனாதிபதி செயலணியின் தலைமைப் பதவி பொது பலசேனா அமைச்சின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு வழங்கியமையானது எனக்கு ஆலோசனை வழங்கவே. தவிர நாட்டுக்கு நீதி வழங்குவதற்காக அல்ல.

இதனை ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

ஆளுங்கட்சியில் அங்கம் வகிக்கும் கட்சித் தலைவர்களின் கலந்துரையாடலில் வைத்தே ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.

நான் செய்யும் செயல்கள் அனைத்துக்கும் கட்சித் தலைவர்களின் ஆலோசனை பெற வேண்டுமாயின் எனக்கு தேவையான நண்பர்களை தெரிவு செய்யவும் அவர்களிடம் அனுமதி பெற வேண்டிய நிலை ஏற்படும் என ஜனாதிபதி இதன்போது குறிப்பிட்டுள்ளார்.

நீதி அமைச்சராக அலி சப்ரியை தெரிவு செய்த போதும் இவ்வாறான எதிர்ப்புகள் எழுந்தன என ஜனாதிபதி இதன்போது மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை நீதியமைச்சர் அலி சப்ரியும் ஒரே நாடு ஒரே சட்டம் எண்ணக்கருவை முன்னெடுத்துச் செல்லும் ஜனாதிபதி செயலணிக் குழுவின் தலைவராக கலகொட அத்தே ஞானசார தேரர் நியமிக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு வெளியிட்டமை குறிப்பிடத்தக்கது.

#SriLankanews

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Nine Arch Bridge Ella Sri Lanka 35 1
செய்திகள்இலங்கை

ஒன்பது வளைவுப் பாலம் விளக்குத் திட்டம் ஒத்திவைப்பு: தனியாரின் நிலப் பிரச்சினை காரணம்!

உள்ளூர் மற்றும் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் முக்கிய இடமான தெமோதரை ஒன்பது வளைவுப் பாலத்தில்...

articles2FjYITDpH4jwEQ9VfnNT42
செய்திகள்அரசியல்இலங்கை

இலங்கை தமிழரசுக் கட்சியின் மன்னார் புதிய கிளை அலுவலகம் இன்று திறந்து வைப்பு!

இலங்கை தமிழரசுக் கட்சியின் (ITAK) மன்னார் கிளைக்கான புதிய அலுவலகம் இன்று (நவம்பர் 23) காலை,...

images 5 1
செய்திகள்உலகம்

லண்டனில் பலஸ்தீன ஆதரவுக் குழு தடையை எதிர்த்துப் போராட்டம்: 90 பேர் கைது!

பிரித்தானிய அரசாங்கம் பலஸ்தீனத்திற்கு ஆதரவான குழுவொன்றைத் தடை செய்ய நடவடிக்கை எடுத்து வருகின்ற நிலையில், அதற்கு...

Woman Harassment
உலகம்செய்திகள்

சக பெண் விமானி மீது பாலியல் பலாத்கார முயற்சி: பெங்களூருவில் சீனியர் விமானி மீது வழக்குப்பதிவு!

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தைச் சேர்ந்த 26 வயது விமானி ஒருவர், தான் வேலை செய்யும் விமான...