8 56
இலங்கைசெய்திகள்

அநுரவின் யாழ்.விஜயம்: மாவட்ட செயலகத்திற்கு முன்பாக பரபரப்பு – குவிக்கப்பட்ட காவல்துறை

Share

அநுரவின் யாழ்.விஜயம்: மாவட்ட செயலகத்திற்கு முன்பாக பரபரப்பு – குவிக்கப்பட்ட காவல்துறை

யாழ். மாவட்ட செயலகத்திற்கு (District Secretariat Jaffna) முன்பாக கவனயீர்ப்பு போராட்டமொன்று ஆரம்பமாகியுள்ளது.

குறித்த போராட்டமானது, வட மாகாண வேலையில்லா பட்டதாரிகள் ஒன்றியத்தினால் இன்றையதினம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

இதன்போது, போராட்டக்காரர்கள் பல்வேறு பாதாதைகளை ஏந்தி கோஷங்களை எழுப்பி வருகின்ற நிலையில், காவல்துறையினர் குவிக்கப்பட்டு போராட்டத்தை கட்டுக்குள் கொண்டு வர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இவ்வானதொரு பின்னணியில், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake) யாழ்ப்பாணத்திற்கு விஜயத்தை மேற்கொண்டுள்ளதுடன், யாழ்.மாவட்ட செயலகத்தில் ஒருங்கிணைப்பு கூட்டத்திலும் கலந்துக் கொண்டுள்ளார்.

இதேவேளை, குறித்த கலந்துரையாடல்களில் புதிய அரசங்கத்தை பிரதிநிதித்துவபடுத்தும் முக்கிய அமைச்சர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டுள்ளனர்.

இந்த நிலையில், யாழ்பபாணத்தில் வல்வெட்டித்துறை மற்றும் சாவகச்சேரி உள்ளி்ட்ட பகுதிகளிலும் ஜனாதிபதி சந்திப்புக்களை நடத்தவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
fl
இலங்கை

பேஸ் புக் காதல் காவல்துறை அதிகாரி உயிர்மாய்ப்பு!

நேற்று அதிகாலை, வலான ஊழல் தடுப்புப்பிரிவில் கடமையாற்றிய காவலதிகாரி ஒருவர் தனது சேவை துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு...

Namal 2
இலங்கை

நாமல் ராஜபக்ச விடுத்துள்ள சவால்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச, கட்சித் தலைமையகத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில்...

death body
இலங்கை

கட்டடம் இடிந்து வீழ்ந்ததில் பட்டதாரி இளைஞர் பலி!

காத்தான்குடி நூராணிய்யா மையவாடி முதலாம் குறுக்கு வீதியில் நிர்மாணிக்கப்பட்டு வரும் புதிய வீடொன்றில் இடம்பெற்ற கட்டுமானப்...

சுகீஸ்வர பண்டார 1
இலங்கை

இன்றைய நாளில் சுகீஸ்வர பண்டாரவிற்கு நீதிமன்று பிறப்பித்துள்ள உத்தரவு.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவின் தனிப்பட்ட செயலாளர் சுகீஸ்வர பண்டார, இன்று கோட்டை நீதவான் நீதிமன்றத்தில்...