6 55
இலங்கைசெய்திகள்

தமிழர் பிரதேசத்தில் அடர்ந்த காட்டுப்பகுதியில் சட்டவிரோத செயல் : சுற்றிவளைத்து பிடித்த காவல்துறை

Share

மட்டக்களப்பு(batticaloa) கொக்கட்டிச்சோலை காவல்துறை பிரிவில் பாரிய கசிப்பு உற்பத்தி நிலையம் காவல்துறையினரால் செவ்வாய்க்கிழமை(28.01.2025) மாலை முற்றுகையிடப்பட்டு 23 பரல்களில் 15 இலட்சம் மில்லி லீட்டர் கோடா 5,25,000 லீட்டர் கசிப்பு மற்றும் தோணி என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.

மட்டக்களப்பு கொட்டிச்சோலை காவல்துறை பிரிவுக்குட்பட்ட மண்முனை பிரதேச வாவியை அண்டிய அடர்ந்த காட்டுப் பகுதியில் நீண்ட நாட்களாக இயங்கி வந்த கசிப்பு உற்பத்தி நிலையத்தை மட்டக்களப்பு மாவட்ட குற்ற விசாரணை பிரிவினர் சுற்றிவளைத்தனர்.

இச்சுற்றி வளைப்பு தேடுதலின் போது 23 பரல்களில் சுமார் 14 லட்சத்து 50 ஆயிரம் மில்லி லீட்டர் கோடா மற்றும் 750 போத்தல்களில் 5,25,000 மில்லி லீட்டர் கசிப்பு என்பன கைப்பற்றப்பட்டதுடன் சந்தேக நபர்கள் பயணிக்கும் தோணியும் காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாவட்ட குற்ற விசாரணை பிரிவு பொறுப்பதிகாரி ஐ.பி தெலங்கா வலகே தலைமையிலான காவல்துறை குழுவினர் மேற்படி சுற்றி வளைப்பை மேற்கொண்டிருந்தனர்.

சந்தேக நபர்கள் தப்பியோடியுள்ளனர். கைப்பற்றப்பட்ட போதை பொருட்கள் கொக்கட்டிச்சோலை காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

Share
தொடர்புடையது
கன்னியா வெந்நீரூற்று
இலங்கை

கன்னியா வெந்நீரூற்று விவகாரம் தொடர்பில் வெளியான அறிக்கை.

ஆட்சிக்கு வரும்போது, நாட்டில் வாழும் அனைவரும் சமம் என கூறி ஆட்சியை பிடித்த அரசாங்கம் தற்போது...

சுரேஸ் பிரேமச்சந்திரன்
இலங்கை

குற்ற செயல்களில் தற்கால அரசுக்கும் பங்குண்டு – சுரேஸ் பிரேமச்சந்திரன்

மட்டக்களப்பு – வாவிக்கரை வீதியில் உள்ள ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் அலுவலகத்தில் நடைபெற்ற...

சுகீஸ்வர பண்டார
இலங்கை

கோட்டாபய ராஜபக்சவின் பிரத்தியேக செயலாளருக்கு விளக்கமறியல்.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் பிரத்தியேக செயலாளர் சுகீஸ்வர பண்டாரவின் விளக்கமறியல் உத்தரவு ஜூலை 30...

காணாமல் ஆக்கப்பட்டோர்nnnn
இலங்கை

அவர்களின் வார்த்தைகளில் நம்பிக்கை இல்லை – தூதுக்குழுவினரின் வருகையினை தொடர்ந்து வந்துள்ள கருத்து.

இன்று, ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதிகளுடன் சித்துப்பாத்தி இந்து மயானத்தில் அமைந்துள்ள மனிதக் புதைகுழியை பார்வையிட்ட பின்னர்...