12 43
இலங்கைசெய்திகள்

முல்லைத்தீவில் நாயிற்கு மரண தண்டனை வழங்கிய பெண்ணுக்கு நேர்ந்த கதி

Share

முல்லைத்தீவில் (Mullaitivu) நாயை தூக்கிலிட்ட விவகாரத்துடன் தொடர்புடைய பெண்ணை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

குற்றவியல் நடைமுறைச் சட்டம் மற்றும் 1907 ஆம் ஆண்டு 13 ஆம் இலக்க விலங்குகள் வதைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த விடயம் குறித்து மேலும் தெரிய வருகையில், முல்லைத்தீவு – ஒட்டுசுட்டான் இணக்க சபையில் நேற்று முன்தினம் (25) வழங்கப்பட்ட கொடூரமான தீர்ப்பு பாரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.

அதாவது, சசிதா என்ற பெண், தனது ஆடு ஒன்றை நாய் கடித்துவிட்டதாக காவல்துறையில் முறையிட்டுள்ளார்.

இது தொடர்பான விசாரணை ஒட்டுசுட்டான் இணக்கசபைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், இணக்கசபையில் இருந்த மூன்று நீதவான்கள் நாயை ஆட்டின் உரிமையாளரிடம் ஒப்படைக்குமாறு தெரிவித்துள்ள நிலையில் அதற்கு நாயின் உரிமையாளரும் ஒத்துக்கொண்டார்.

அதன் பிறகு நீதவான்கள் குறித்த நாயை தூக்கில் இடுமாறு உத்தரவிட்டுள்ளதுடன், அதன் புகைப்படத்தையும் தமக்கு அனுப்புமாறு கோரியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, நாயை வாங்கிய ஆட்டின் உரிமையாளரான பெண், நாயை தூக்கிலிட்ட நிலையில் இது குறித்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியிருந்தன.

குறித்த விடயம் பாரிய சர்ச்சையை ஏற்படுத்தியிருந்ததுடன் மக்கள் தொடர்ச்சியாக கடும் விமர்சனங்களை முன்வைத்து வந்த நிலையில், சமூக ஊடகப் பதிவின் பேரில் 48 வயதுடைய குறித்த பெண்ணை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

இதேவேளை நாயின் உரிமையாளரான பெண் ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில், ”தன்னுடைய நாய் வீட்டில் இருந்ததாகவும், குறித்த ஆடு தனது வீட்டிற்கு வந்த போது தான் நாய் கடித்தது.

அத்துடன் ஆட்டின் உரிமையாளர் கோரிய நஷ்ட ஈட்டை என்னால் வழங்க முடியாததால் நாயை அவரிடம் ஒப்படைத்தேன்” என தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...