9 54
இலங்கைசெய்திகள்

மகிந்த விடுத்துள்ள அறிவிப்பு: விஜேராம வீட்டில் குவியப்போகும் மொட்டு உறுப்பினர்கள்

Share

சிறிலங்கா பொதுஜன பெரமுனவை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச விசேட அறிவிப்பொன்றை விடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதன்போது, விஜேராமவில் உள்ள உத்தியோகபூர்வ இல்லத்தில் இன்று (27) நடைபெறவுள்ள கூட்டத்தில் அனைத்து முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கலந்து கொள்ளுமாறு மகிந்த அழைப்பு விடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

அத்தோடு, பொதுஜன பெரமுன கட்சியில் இருந்து விலகி வேறு அரசியல் கட்சிகள் மற்றும் குழுக்களில் இணைந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதன்படி, அனைத்து சிறிலங்கா பொதுஜன பெரமுன உறுப்பினர்களும் இன்றிரவு மகிந்த ராஜபக்சவின் இல்லத்தில் கூடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்த காலத்திலிருந்து ராஜபக்சர்களும் பொதுஜன பெரமுன கட்சியும் பாரிய அரசியல் பழிவாங்கல்களுக்கு உட்படுத்தப்படுவதாக விமர்சனங்கள் உருவாகியுள்ளன.

அதனை உறுதிபடுத்தும் விதமாக அண்மையில் பல சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதுடன், அக்கட்சியின் முக்கிய உறுப்பினர்களான நாமல் ராஜபக்ச உட்பட பலரும் வெளிப்படையாக கருத்துக்களை முன்வைத்திருந்தனர்.

இவ்வாறனதொரு பின்னணியில், அனைத்து சிறிலங்கா பொதுஜன பெரமுன கட்சி உறுப்பினர்களையும் ஒன்று சேருமான மகிந்த ராஜபக்ச அழைப்பு விடுத்துள்ளதாக வெளியான செய்தியானது, பேசுபொருளாக மாறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
sri lankan buddhist monks participate all night 440nw 10583135b
செய்திகள்இலங்கை

தேரர்களை இழிவுபடுத்த வேண்டாம்: சைபர் தாக்குதல்களுக்கு எதிராக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு!

மிஹிந்தலை ரஜமஹா விகாராதிபதி உள்ளிட்ட மகா சங்கத்தினரை இழிவுபடுத்தும் நோக்கில் சமூக வலைதளங்கள் வாயிலாக முன்னெடுக்கப்படும்...

26 69648efcbd42c
செய்திகள்அரசியல்இலங்கை

பாதுகாப்புத் தரப்பிடம் மண்டியிட்டதா அநுர அரசாங்கம்?: புதிய பயங்கரவாத சட்ட வரைவுக்கு சுமந்திரன் கடும் எதிர்ப்பு!

தற்போதைய அரசாங்கம் கொண்டுவரவுள்ள ‘பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டம்’ (PSTA) எனும் புதிய சட்ட வரைவானது,...

download 1
செய்திகள்இலங்கை

பத்தரமுல்லையில் கார்களை வாளால் தாக்கிய இளைஞர்: ஜனவரி 22 வரை விளக்கமறியல்!

பத்தரமுல்ல – தியத உயன மற்றும் எத்துல் கோட்டை பிரதான வீதியில் மோட்டார் சைக்கிளில் சென்றவாறு,...

images 9 2
செய்திகள்அரசியல்இலங்கை

விடைபெறும் அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் – முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் சந்திப்பு!

இலங்கைக்கான தனது இராஜதந்திரப் பணிகளை நிறைவு செய்து கொண்டு நாடு திரும்பவுள்ள அமெரிக்கத் தூதுவர் ஜூலி...