hemantha herath
செய்திகள்இலங்கை

நாடு எந்நேரமும் முடக்கப்படலாம் – பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவிப்பு

Share

நாடு எந்நேரமும் முடக்கப்படலாம் – பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவிப்பு

நாட்டின் நிலைமைகளைப் பொறுத்து நாடு முடக்கப்படுவது தொடர்பான தீர்மானங்கள் மாறலாம். நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துவரும் நிலையில், நாடு முடக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை சுகாதாரத் தரப்பினராலும் முன்வைக்கப்பட்டு வருகின்றது. – இவ்வாறு பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஹேமந்த ஹேரத் தெரிவித்தார்.

இவ் விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
“நாட்டின் கொரோனா பரவல் நிலைமை தொடர்பில் தீவிர கவனம் செலுத்தி வருகின்றோம். கொரோனாக் கட்டுப்பாட்டுச் செயலணியில் தொடர்ச்சியாக இந்தக் காரணிகளைச் சுகாதாரத் தரப்பினர் சுட்டிக்காட்டி வருகின்றனர்.
ஆனால்,கொரோனா செயலணிக் கூட்டத்தில் நாட்டை முழுமையாக முடக்குவது குறித்து இன்னமும் தீர்மானிக்கப்படவில்லை.
இதற்கு முன்னரும் நாளாந்தம் மூவாயிரத்துக்கும் அதிகமான கொரோனாத்தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர். அதனையடுத்து நாட்டை முடக்குவது குறித்து ஆரம்பத்தில் தீர்மானிக்காதபோதும் இறுதிநேரத்தில் நாட்டை உடனடியாக முடக்கத் தீர்மானிக்கப்பட்டது. தற்போதும் அவ்வாறான நிலைமைகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. நிலைமையைக் கருத்திற்கொண்டு தீர்மானங்கள் மாற்றப்படலாம். எனவே, மக்கள் பொறுப்புடன் செயற்பட வேண்டும் எனக் கேட்டுக்கொள்கின்றோம்” – என்றார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
13 12
உலகம்செய்திகள்

தமிழின அழிப்பை மறுப்பவர்களுக்கு கனடாவில் இடமில்லை! பிரம்டன் மேயர் ஆவேசப் பேச்சு

இலங்கையில் தமிழர்கள் இனவழிப்பு செய்யப்படவில்லை என்பவர்களுக்கு கனடாவில் இடமில்லை என பிரம்டன் முதல்வர் பட்ரிக் பிரவுண்...

12 13
இலங்கைசெய்திகள்

இந்திய – பாகிஸ்தான் போர்நிறுத்த ஒப்பந்தம் குறித்து இலங்கையின் நிலைப்பாடு

இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் எட்டப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தைப் பாராட்டி ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க...

11 12
இலங்கைசெய்திகள்

சிங்கள நடிகை செமினி இதமல்கொடவிற்கு பிணையில் செல்ல அனுமதி

வெலிக்கடை பொலிஸாரால் கைது செய்யப்பட்ட நடிகை செமினி இதமல்கொடவிற்கு பிணையில் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கொழும்பு...

10 15
இலங்கைசெய்திகள்

இறம்பொடை பேருந்து விபத்துக்கான காரணம் தொடர்பில் பொலிஸார் விசாரணை

கொத்மலை கரண்டியெல்ல பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்துக்கான காரணம் சாரதியின் அலட்சியமா அல்லது பேருந்தின் தொழில்நுட்பக்...