19 23
இலங்கைசெய்திகள்

கோர விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த இருவர் பலி

Share

கோர விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த இருவர் பலி

குருணாகலில் இடம்பெற்ற கோர விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதரி மற்றும் சகோதரன் உயிரிழந்துள்ளனர்.

மஹாவ பகுதியில் நேற்று முன்தினம் இரவு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறியுடன் மோட்டர் சைக்கிள் மோதுண்டமையினால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

மோட்டார் சைக்கிளில் பயணித்த 31 வயதான ருவினிகா தனஞ்சனி சேமசிங்க, 23 வயதான புத்திக நயனஜித் சேமசிங்க ஆகியோர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்த இருவரும் வெவ்வேறு தொழிற்சாலைகளில் பணியாற்றுவதாக தெரியவந்துள்ளது.

சீரற்ற காலநிலை காரணமாக சகோதரியை பாதுகாப்பாக அழைத்துச் சென்ற வேளையில் விபத்து நேர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மோட்டார் சைக்கிள் வேக கட்டுப்பாட்டை இழந்து நிறுத்தப்பட்டிருந்த லொறி மீது மோதுண்டு விபத்து ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விபத்தில் படுகாயமடைந்த அக்காவும் மற்றும் தம்பியும் நிக்கவெரட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதும் அவர்கள் ஏற்கனவே உயிரிழந்துள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

Share
தொடர்புடையது
22 2
இலங்கைசெய்திகள்

ஐக்கிய நாடுகளின் பட்டிலில் இந்தியாவை முந்திய இலங்கை

ஐக்கிய நாடுகள் சபையின் நிலையான வளர்ச்சிக்கான இலக்குகள் பட்டியலில், இலங்கைக்கு 93வது இடம் கிடைத்துள்ளது. வறுமை...

21 2
இலங்கைசெய்திகள்

இருநூறு உள்ளூராட்சி மன்றங்களின் அதிகாரத்தைக் கைப்பற்றிய அரசாங்கம்

நாடு தழுவிய ரீதியில் 200 உள்ளூராட்சி மன்றங்களின் அதிகாரத்தை தேசிய மக்கள் சக்தி தலைமையிலான அரசாங்கம்...

20 1
செய்திகள்பொழுதுபோக்கு

இறுதி நாளில் இந்தியாவை வீழ்த்திய இங்கிலாந்து

சுற்றுலா இந்திய அணிக்கும் இங்கிலாந்து அணிக்கும் இடையிலான முதலாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி...

Untitled 1 Recovered Recovered Recovered Recovered 3
இலங்கைசெய்திகள்

முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

ஜனாதிபதி செயலகத்தின் வாகனங்களை மோசடியாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டின் கீழ் முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவுக்கு எதிரான...