25 678e6a04bf846
இலங்கைசெய்திகள்

ஒன்றிணையப்போகும் ரணில் – சஜித் தரப்புகள்: செயற்குழு எடுத்துள்ள முடிவு

Share

ஒன்றிணையப்போகும் ரணில் – சஜித் தரப்புகள்: செயற்குழு எடுத்துள்ள முடிவு

ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி கட்சியை இணைப்பதற்கான கலந்துரையாடல்களைத் தொடங்க ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு ஒப்புதல் பெற்றுள்ளது.

இன்றையதினம் (20) இடம்பெற்ற செயற்குழுக் கூட்டத்தில் இந்த உடன்பாடு எட்டப்பட்டுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில், புறக்கோட்டையில் உள்ள சிறிகொத்த கட்சி தலைமையகத்தில் செயற்குழு கூட்டம் நடைபெற்றது.

இதன்போது, எதிர்வரும் தேர்தல்களில் ஐக்கிய தேசிய முன்னணி, ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் பிற அரசியல் கட்சிகளுடன் இணைந்து போட்டியிட செயற்குழு முடிவு செய்துள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் ருவன் விஜேவர்தன மற்றும் கட்சியின் பொதுச் செயலாளர் தலதா அதுக்கோரல ஆகியோரின் தலைமையில் ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி இணைப்பு குறித்த கலந்துரையாடல்கள் நடத்தப்படும் என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
4670422 455699102
செய்திகள்உலகம்

கிறிஸ்துமஸ் தின போர் நிறுத்தத்தை ரஷ்யா நிராகரித்தது வேதனையளிக்கிறது – பாப்பரசர் 14-வது லியோ கவலை!

உலகம் முழுவதும் நாளை (25) கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்படவுள்ள நிலையில், பாப்பரசர் 14-வது லியோ விடுத்த...

images 10 3
செய்திகள்உலகம்

தாய்வானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 6.1 ஆகப் பதிவு!

தாய்வானில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த நிலநடுக்கம்...

images 9 3
அரசியல்இலங்கைசெய்திகள்

அம்பலாங்கொடை பொலிஸ் நிலையத்தில் துப்பாக்கி வெடித்ததில் கான்ஸ்டபிள் காயம்!

அம்பலாங்கொடை பொலிஸ் நிலையத்தில் இன்று (24) மாலை நிகழ்ந்த எதிர்பாராத துப்பாக்கிச் சூட்டு விபத்தில் பொலிஸ்...

images 9 3
செய்திகள்இலங்கை

நீர்நிலைகளில் இறங்கும்போது எச்சரிக்கை: பண்டிகைக் காலத்தில் பொதுமக்களுக்கு வைத்திய நிபுணர் விடுத்த அவசர வேண்டுகோள்!

தற்போது நிலவும் அனர்த்தச் சூழல் மற்றும் பண்டிகைக் காலத்தைக் கருத்திற் கொண்டு, நீர்நிலைகளைப் பயன்படுத்தும் போது...