25 678e6a04bf846
இலங்கைசெய்திகள்

ஒன்றிணையப்போகும் ரணில் – சஜித் தரப்புகள்: செயற்குழு எடுத்துள்ள முடிவு

Share

ஒன்றிணையப்போகும் ரணில் – சஜித் தரப்புகள்: செயற்குழு எடுத்துள்ள முடிவு

ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி கட்சியை இணைப்பதற்கான கலந்துரையாடல்களைத் தொடங்க ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு ஒப்புதல் பெற்றுள்ளது.

இன்றையதினம் (20) இடம்பெற்ற செயற்குழுக் கூட்டத்தில் இந்த உடன்பாடு எட்டப்பட்டுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில், புறக்கோட்டையில் உள்ள சிறிகொத்த கட்சி தலைமையகத்தில் செயற்குழு கூட்டம் நடைபெற்றது.

இதன்போது, எதிர்வரும் தேர்தல்களில் ஐக்கிய தேசிய முன்னணி, ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் பிற அரசியல் கட்சிகளுடன் இணைந்து போட்டியிட செயற்குழு முடிவு செய்துள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் ருவன் விஜேவர்தன மற்றும் கட்சியின் பொதுச் செயலாளர் தலதா அதுக்கோரல ஆகியோரின் தலைமையில் ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி இணைப்பு குறித்த கலந்துரையாடல்கள் நடத்தப்படும் என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
Murder Recovered Recovered Recovered 19
இலங்கைசெய்திகள்

கஹவத்தையில் கடும் பதற்றம்! பொதுமக்கள் மீது கண்ணீர் புகைத் தாக்குதல் நடத்தும் பொலிஸார்

கஹவத்தையில் பொலிஸார் மற்றும் பொதுமக்களுக்கு இடையில் ஏற்பட்ட குழப்பநிலை காரணமாக அங்கு கடும் பதற்றமான சூழல்...

Murder Recovered Recovered Recovered 17
இலங்கைசெய்திகள்

எமக்கு தொடர்பில்லை! செம்மணி அவலத்தில் இருந்து பொறுப்பு துறக்கும் அமைச்சர்

செம்மணி புதைகுழி சம்பவங்களுக்கும் தனது கட்சிக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம்...

9
சினிமாசெய்திகள்

பிக்பாஸ் புகழ் ஷாரிக்கிற்கு குழந்தை பிறந்தது.. அவரே வெளியிட்ட குழந்தையின் வீடியோ

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வந்தவர்கள் உமா ரியாஸ் மற்றும் ரியாஸ் கான் ஜோடி....

8
சினிமாசெய்திகள்

சிவகார்த்திகேயனுடன் மோதும் முன்னணி நடிகர்.. பிரம்மாண்டமாக ஒரே நாளில் வெளியாகும் இரண்டு படங்கள்

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் மதராஸி. இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன்...