16 25
இலங்கைசெய்திகள்

ஊடக பிரிவு அலுவலக சுவரில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள அநுரவின் புகைப்படம்

Share

ஊடக பிரிவு அலுவலக சுவரில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள அநுரவின் புகைப்படம்

ஜனாதிபதி ஊடகப் பிரிவின் பிரதான நுழைவு வாயிலுடன் கூடிய சுவரில் மாட்டப்பட்டிருந்த முன்னாள் ஜனாதிபதிகள் புகைப்படங்கள் அகற்றப்பட்டு தற்போதைய ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் புகைப்படம் மாத்திரம் வைக்கப்பட்டிருப்பதாக மத்திய மாகாணத்தின் முன்னாள் ஆளுநர் ரஞ்சித் கீர்த்தி தென்னகோன் தெரிவித்துள்ளார்.

முகநூலில் இட்ட பதிவொன்றின் மூலமே அவர் இந்த தகவலை வெளிப்படுத்தியுள்ளார்.

குறித்த சுவரில் சுதந்திர இலங்கையின் அனைத்து அரச தலைவர்களின் புகைப்படங்களும் அண்மைக்காலம் வரை கௌரவமான முறையில் காட்சிப்படுத்தப்பட்டிருந்ததாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தற்போது, அனைத்து புகைப்படங்களும் நீக்கப்பட்டு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் புகைப்படம் மட்டுமே இருப்பதாக அவர் குறித்த பதிவில் தெரிவித்துள்ளார்.

அத்துடன், ஜனாதிபதி ஊடகப் பிரிவின் அலுவலகம் ஒரு கட்சி அலுவலகம் இல்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், இலங்கையின் முன்னாள் அரசத்தலைவர்களான டி.எஸ்., டட்லி, சேர் ஜோன், பண்டாரநாயக்க, தஹநாயக்க, சிறிமாவோ, ஜே.ஆர், பிரேமதாச, விஜேதுங்க, சந்திரிகா, மகிந்த, மைத்திரிபால, கோட்டாபய, ரணில் போன்றோரின் வரிசையில் இருப்பதற்கு அநுரவும் தகுதியானவர் என கூறிய தென்னகோன், அநுரவை குறைத்து மதிப்பிட வேண்டாம் எனவும் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
25 680b5efd70985
செய்திகள்அரசியல்இலங்கை

உகண்டா பணத்தை மீட்க ஒத்துழைக்கத் தயார் – அரசாங்கத்திற்கு நாமல் ராஜபக்ச சவால்!

ராஜபக்சக்களால் உகண்டாவில் பதுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் நிதியை அநுர அரசாங்கம் ஏன் இன்னும் மீட்கவில்லை என ஸ்ரீலங்கா...

vikatan 2025 12 25 jj677mzq ajitha 66
செய்திகள்இந்தியா

தவெக மாவட்டச் செயலாளர் பதவி கிடைக்காததால் விரக்தி: தூக்க மாத்திரை உட்கொண்டு பெண் நிர்வாகி தற்கொலை முயற்சி!

நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தின் (TVK) தூத்துக்குடி மாவட்டச் செயலாளர் பதவி வழங்கப்படாததால்...

Kajenthirakumar Ponnambalam
செய்திகள்அரசியல்இலங்கை

பலாலி ஓடுதளத்தை விரிவாக்குவது அவசியம் – இந்திய அமைச்சர் ஜெய்சங்கரிடம் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வலியுறுத்தல்!

யாழ்ப்பாணம் – பலாலி விமான நிலையத்தின் ஓடுதளத்தை விரிவுபடுத்தி, அதனை முழுமையான சர்வதேச தரத்திற்கு உயர்த்துவது...

25 694d11c3cbd81
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

கண்டி – ஹசலகவில் கோரத் தாண்டவமாடிய நிலச்சரிவு: 5 கிராமங்கள் வசிக்கத் தகுதியற்றவை என அறிவிப்பு!

டித்வா புயலால் ஏற்பட்ட கடுமையான நிலச்சரிவுகளைத் தொடர்ந்து கண்டி மாவட்டத்தில் ஹசலக நகரை ஒட்டிய பமுனுபுர...