1 37
சினிமாபொழுதுபோக்கு

மாரடைப்பு காரணமாக மரணமடைந்த தயாரிப்பாளர்.. அதிர்ச்சியில் திரையுலகம்

Share

மாரடைப்பு காரணமாக மரணமடைந்த தயாரிப்பாளர்.. அதிர்ச்சியில் திரையுலகம்

தமிழ் திரையுலகின் பிரபல தயாரிப்பாளர் ஜெயமுருகன் மாரடைப்பு காரணமாக மரணமடைந்துள்ளது பெரும் அதிர்ச்சியை திரையுலகில் ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் சினிமாவில் பிரபலமான தயாரிப்பாளரும், இயக்குநருமானவர் ஜெயமுருகன். இவர் 1995ல் வெளிவந்த சிந்து பாத் படத்தின் மூலம் தயாரிப்பாளராக அறிமுகமாகி, பின் ரோஜா மலரே படத்தின் மூலம் இயக்குநராகவும் அறிமுகமானார்.

இதுமட்டுமின்றி தான் இயக்கிய சில திரைப்படங்களுக்கு இசையமைப்பாளராகவும் இருந்துள்ளார். மேலும் சில திரைப்படங்களில் நடித்தும் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படி பன்முக திறமை கொண்ட ஜெயமுருகன் தனது இறுதி காலகட்டத்தை சொந்த ஊரான திருப்பூரில் கழித்து வந்துள்ளார். இந்த நிலையில், ஜெயமுருகனுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்ட மரணமடைந்துள்ளார்.

இவருடைய மரணம் திரையுலகிற்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. இவருடைய இறுதி சடங்குகள் திருப்பூர் தென்னம்பாளையத்தில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது.

Share
தொடர்புடையது
image 1200x800 42
பொழுதுபோக்குசினிமா

கழிப்பறையில் ரகசிய வீடியோ: கன்னட நடிகைக்கு நேர்ந்த அதிர்ச்சி!

பெங்களூருவில் உள்ள மைதானம் ஒன்றில் நடைபெற்ற மூன்று நாள் நட்சத்திர மகளிர் கிரிக்கெட் போட்டியில் (Celebrity...

image 1200x800 15 1
சினிமாபொழுதுபோக்கு

கொஞ்சம் மிஸ் ஆகியிருந்தா சூர்யா காலி!- படப்பிடிப்பில் நடந்த பகீர் சம்பவம்; சீக்ரெட் உடைத்த கே.எஸ். ரவிக்குமார்!

தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமான சூர்யா, தற்போது ‘கருப்பு’ திரைப்படத்தின் வெளியீட்டிற்காகக் காத்திருக்கிறார். இந்நிலையில், 2009-ஆம்...

image 1200x800 18
சினிமாபொழுதுபோக்கு

இளையராஜாவுக்குப் பின்னடைவு: 134 படப் பாடல்களைப் பயன்படுத்த டெல்லி உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை!

இசையமைப்பாளர் இளையராஜா தான் இசையமைத்த பாடல்களின் உரிமையைத் தன்னிச்சையாகப் பயன்படுத்தவோ அல்லது மற்றவர்களுக்கு உரிமம் வழங்கவோ...

image ea82c3095c
பொழுதுபோக்குசினிமா

கும்பமேளா மோனலிசாவின் நெகிழ்ச்சி: முதல் படச் சம்பளத்தில் பெண்களுக்கான பாடசாலை! 

மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த ‘மோனலிசா போஸ்லே’ (Monalisa Bhosle), ஒரு சமூக வலைதளப் பதிவின் மூலம்...