20 19
இலங்கைசெய்திகள்

நெல்லுக்கான உத்தேச விலை தொடர்பில் வெளியான தகவல்

Share

நெல்லுக்கான உத்தேச விலை தொடர்பில் வெளியான தகவல்

நெல்லுக்கான உத்தேச விலை உடனடியாக நிர்ணயிக்கப்படும் என விவசாய பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன( Namal Karunarathna) அறிவித்துள்ளார்.

ஹம்பாந்தோட்டை – பன்னேகமுவ பிரதேசத்தில் உள்ள சதொச அரிசி களஞ்சியசாலை மற்றும் ஆலையை நேற்று (17) அவதானித்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இந்தநிலையில், நெல் களஞ்சியசாலைகளை சீர்செய்வதற்கு பாதுகாப்பு பிரிவினரின் ஆதரவை பெற்றுக்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளதாக காணி மற்றும் நீர்ப்பாசன பிரதி அமைச்சர் கலாநிதி சுசில் ரணசிங்க தெரிவித்துள்ளார்.

அத்தோடு, நெல்லுக்கான உத்தரவாத விலை மற்றும் அரிசிக்கான கட்டுப்பாட்டு விலை தொடர்பிலான வர்த்தமானி எதிர்வரும் வாரம் வெளியிடப்படும் என வர்த்தகம், வாணிபம், உணவு பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

மேலும், விவசாயிகளையும், நுகர்வோரையும் பாதுகாப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, 2015ஆம் ஆண்டு உலக வங்கியின் உதவியுடன் நிதி அமைச்சினால் நடத்தப்படும் அனுராதபுரம் – கலென்பிந்துனுவெவ உபுல்தெனிய தானிய களஞ்சியசாலைகளை வேறு நோக்கத்திற்காக பயன்படுத்தும் திட்டம் குறித்து விவசாயிகள் விசனம் தெரிவித்துள்ளனர்.

இங்கு சுமார் 5000 மெற்றிக் தொன் அரிசியை களஞ்சியப்படுத்துவதற்கான வசதிகள் உள்ளதாகவும் விவசாயிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

Share
தொடர்புடையது
road closed
இலங்கை

வெள்ளப்பெருக்கினால் மூடப்பட்டுள்ள வீதிகள்.

தொடர்ந்தும் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக தற்போது பல பிரதேசங்களில் ஏராளமான வீதிகள் போக்குவரத்திற்கு தற்காலிகமாக...

ester attac 1
இலங்கை

பிள்ளையான் – சுரேஷ் சலே திண்டாட்டத்தில் இருப்பதாக வெளியாகிய தகவல்.

பிரித்தானியாவைச் சேர்ந்த இராணுவ ஆய்வாளர் பிரபாகரன், பிரபல ஊடக நிறுவன நிகழ்ச்சி ஒன்றில் கருத்து தெரிவிக்கும்...

Fire Breaks
இலங்கை

புறக்கோட்டை வர்த்தக நிலையத்தில் திடீரென ஏற்பட்ட தீ பரவல்.

கொழும்பு புறக்கோட்டை பிரதான வீதியிலுள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் திடீரென தீ பரவல் ஏற்பட்டுள்ளது. குறித்த...

உடற்கூற்று பரிசோதனை
இலங்கை

மஹர சிறைக்கலவரத்தில் உயிரிழந்த நபரின் உடற்கூற்று பரிசோதனை – வெளியான தகவல்கள்.

இன்றைய தினம், மஹர சிறைச்சாலை மோதலில் உயிரிழந்த கைதியின் சடலம் மீதான உடற்கூற்று பரிசோதனை விசேட...