17 19
இலங்கைசெய்திகள்

மெட்டா நிறுவனத்திலிருந்து ஆயிரக்கணக்கான ஊழியர்கள் பணிநீக்கம்

Share

மெட்டா நிறுவனத்திலிருந்து ஆயிரக்கணக்கான ஊழியர்கள் பணிநீக்கம்

மெட்டா (Meta) நிறுவனம் 3,600 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய திட்டமிட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

செயற்கை நுண்ணறிவு எனப்படும் AI வந்தபிறகு உலக முன்னனி நிறுவனங்கள் அதன் மீது ஆர்வம் காட்டி வருகின்றன.

இதனால், ஊழியர்களின் பணிக்கு அபாயம் ஏற்படும் என்றும் தெரிவிக்கப்பட்டு வருகின்றது.

இந்தநிலையில், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் வாட்ஸ்-அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களை நடத்தும் மெட்டா நிறுவனரான மார்க் ஜுக்கர்பெர்க் (Mark Zuckerberg) தமது நிறுவனத்தில் பணியாற்றும் 3,600 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய முடிவு செய்துள்ளார்.

இதனடிப்படையில், குறித்த ஊழியர்களை பணிநீக்கம் செய்துவிட்டு புதிய ஊழியர்களை பணியமர்த்தவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மெட்டா நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நிறுவனத்தின் கொள்கைகளை சீரமைக்கும் ஒருபணி நடைபெற்று வருகின்றது.

குறைந்த செயல்திறன் கொண்டவர்கள் என அடையாளம் காணப்பட்ட சுமார் 3,600 பணியாளர்கள் பணிநீக்கம் செய்யப்படவுள்ளனர்.

அதாவது, ஐந்து சதவீதம் ஊழியர்களை வேலை நீக்கம் செய்ய முடிவு எடுக்கப்பட்டுள்ளதுடன் அவர்களுக்கு போதிய இழப்பீடும் வழங்கப்படும்.

ஒரு வருடத்தில் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யாதவர்களை நாங்கள் பொதுவாக நிர்வகிக்கிறோம்.

செப்டம்பர் மாத நிலவரப்படி மெட்டாவில் மொத்தம் சுமார் 72,400 பணியாளர்கள் உள்ளனர், இதில் 3,600 பணியாளர்கள் பணிநீக்கம் செய்யப்படவுள்ளனர்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
world 117
செய்திகள்அரசியல்இலங்கை

தையிட்டி விகாரை பகுதி காணி விடுவிப்பு: உரிமையாளர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர அழைப்பு!

யாழ்ப்பாணம், தையிட்டி விகாரை அமைந்துள்ள பகுதிகளில் காணி உள்ளவர்கள், தமது காணி உறுதிப்பத்திரங்கள் மற்றும் ஆவணங்களுடன்...

world 116
செய்திகள்இலங்கைபிராந்தியம்

குருநாகலில் செங்கல் ஏற்றிச் சென்ற லொறி கவிழ்ந்து விபத்து: சாரதி உட்பட இருவர் பலி!

குருநாகல் மாவட்டம், வாரியப்பொல – நாரம்மல வீதியின் நெலும்புவ, கொலமுணுஓயா பகுதியில் இன்று (ஏப்ரல் 12,...

world 115
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மட்டக்களப்பில் புதையல் வேட்டை: அதிரடிப்படை அதிகாரி உட்பட மேலும் இருவர் கைது!

மட்டக்களப்பு, கரடியனாறு பகுதியில் புதையல் தோண்டும் நடவடிக்கையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் மகா ஓயா விசேட அதிரடிப்படை...

world 114
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யாழ்ப்பாணம் இளவாலையில் அதிரடி: வீடொன்றில் இருந்து கைத்துப்பாக்கி மீட்பு!

யாழ்ப்பாணம், இளவாலை காவல்துறைப் பிரிவிற்குட்பட்ட பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து இன்று (ஏப்ரல் 12, 2026)...