17 11
இலங்கைசெய்திகள்

2025 ஆண்டுக்கான அநுர அரசின் மொத்த செலவுத் தொகை வெளியானது!

Share

2025 ஆம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீட்டு சட்டமூலத்தின் படி, இந்த ஆண்டு ஜனவரி 1 முதல் டிசம்பர் 31 வரையிலான காலகட்டத்திற்கான அரசாங்கத்தின் செலவு ரூ. 4,616 பில்லியன் என மதிப்பிடப்பட்டுள்ளது.

இந்த சட்டமூலத்தை பிரதமர் ஹரிணி அமரசூரிய (இன்று (09) நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ளார்.

அதன்படி, இந்த ஆண்டு அமைச்சகங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதியில் மிகப்பெரிய தொகை நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார மேம்பாட்டு அமைச்சகத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளது, இது 713 பில்லியன் ரூபாய் ஆகும்.

அத்தோடு, இந்த ஆண்டு, மதிப்பிடப்பட்ட தொடர்ச்சியான செலவு ரூ. 2,518 மில்லியனாகவும், மூலதனச் செலவு ரூ. 354 மில்லியனாகவும் பதிவாகியுள்ளது.

இந்த நிலையில், சுகாதாரம் மற்றும் ஊடக அமைச்சுகளுக்கு ரூ. 412 மில்லியன் என்பதுடன், அதற்கான மதிப்பிடப்பட்ட மூலதனச் செலவு ரூ. 95,500 மில்லியன் ஆகும்.

இதேவேளை, கடந்த ஆண்டு, மதிப்பிடப்பட்ட தொடர்ச்சியான செலவு ரூ. 3,673 மில்லியனாகவும், மூலதனச் செலவு ரூ. 528 மில்லியனாகவும் இருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
25 1
செய்திகள்இலங்கைவிளையாட்டு

உலகக் கிண்ணத்தில் இலங்கை அணியின் தோல்வி: கிரிக்கெட்டை முழுமையாகச் சீரமைக்க வேண்டும் – நாமல் ராஜபக்ஷ!

இலங்கை கிரிக்கெட் அணியின் தற்போதைய வீழ்ச்சி குறித்து தனது ஏமாற்றத்தை வெளிப்படுத்தியுள்ள நாமல் ராஜபக்ஷ, தோல்விக்கான...

24 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யுத்த கால ஊடகவியலாளர் படுகொலைகள்: உண்மைகளைக் கண்டறிய ஜனாதிபதி ஆணைக்குழு வேண்டும் – ரவூப் ஹக்கீம்!

மூத்த ஊடகவியலாளர் பாரதி இராஜநாயகத்தின் முதலாம் ஆண்டு நினைவு நிகழ்வு மற்றும் “பாரதி ஒரு மனிதாபிமான...

23 1
செய்திகள்அரசியல்இலங்கை

அரசியல் இருப்புக்கு போராளிகள் தேவை, ஆனால் அவர்களின் தேவைகள் புறக்கணிப்பு: சிவகுரு மதிவண்ணன் குற்றச்சாட்டு!

புனித பூமி மக்கள் கட்சியின் யாழ். மாவட்ட அமைப்பாளர் சிவகுரு மதிவண்ணன் நேற்று (மார்ச் 1)...

22 1
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

அவசரகால நிலையை நீட்டிக்க அரசாங்கம் பரிசீலனை!

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய அமைச்சரவை பேச்சாளர் நலிந்த ஜயதிஸ்ஸ, நாடு...