20 8
இலங்கைசெய்திகள்

யாழ். சாவகச்சேரியில் எம்.பியால் பிடிக்கப்பட்ட பாரவூர்தி: நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!

Share

யாழ். சாவகச்சேரியில் எம்.பியால் பிடிக்கப்பட்ட பாரவூர்தி: நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!

கடந்த 2ஆம் திகதி நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரனினால் வழிமறிக்கப்பட்டு காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்ட  சுண்ணக்கற்களை ஏற்றிச்சென்ற பாரவூர்தி நீதிமன்றத்தினால் விடுவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான வழக்கு சாவகச்சேரி நீதிமன்றத்தினால் இன்று(07) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில் மேற்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதன்போது, பாரவூர்தியின் சாரதி சார்பாக முன்னிலையான சட்டத்தரணி குருபரனினால், சட்ட ஏற்பாடுகளுக்கு அமைவாகவே குறித்த சுண்ணக்கல் ஏற்றி செல்லப்பட்டுள்ளதாக தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

மேலும், குறித்த விவகாரம் தொடர்பான சட்ட ஏற்பாடுகள் சட்டத்தரணி குருபரனினால் நீதிமன்ற கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

இந்நிலையில், பாரவூர்தி மற்றும் சுண்ணக்கற்களை விடுவித்த நீதவான், வழக்கு விசாரணைகளை எதிர்வரும் பெப்ரவரி 5ஆம் திகதிக்கு ஒத்திவைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...