17 9
இலங்கைசெய்திகள்

இலங்கை வருகிறார் இந்திய பிரதமர் மோடி

Share

இலங்கை வருகிறார் இந்திய பிரதமர் மோடி

இந்திய பிரதமர் நரேந்திர மோடி(Narendra Modi )இந்த வருடத்திற்குள் இலங்கைக்கு விஜயம் செய்வார் என கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் செவ்வாய்க்கிழமை (07) அறிவித்துள்ளது.

எனினும் அவர் வருகைக்கான திகதிகள் இன்னும் இரு தரப்பினராலும் முடிவு செய்யப்படவில்லை.

இந்திய உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜா(Santosh Jha) செய்தியாளர்களிடம் கூறுகையில், “இந்த பயணத்திற்கான சரியான நேரத்தை நாங்கள் உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளோம் என்றார்.

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க(Anura Kumara Dissanayake), டிசம்பரின் நடுப்பகுதியில் புதுடில்லிக்கு இரண்டு நாள் விஜயம் மேற்கொண்டிருந்த போது, பிரதமர் மோடியை  இலங்கை வருமாறு அழைப்பு விடுத்திருந்தார்.

அநுர குமார திஸாநாயக்க செப்டம்பரில் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட பின்னர் தனது முதல் விஜயமாக இந்தியாவை தேர்ந்தெடுத்தார். அத்துடன் திசாநாயக்க பொறுப்பேற்றவுடன் கொழும்புக்கு விஜயம் செய்த முதல் வெளிநாட்டு பிரமுகர் இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ் ஜெய்சங்கர்(Dr S Jaishankar) ஆவார்.

பிரதமர் மோடி 2015 முதல் 2017 வரை இரண்டு முறை இலங்கைக்கு விஜயம் செய்துள்ளார்.

திஸாநாயக்க விரைவில் சீனாவுக்கு விஜயம் செய்யவுள்ளார். அவர் 2025 ஜனவரி 14 முதல் ஜனவரி 17 வரை சீனாவுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொள்ளவுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் இன்று(07) அறிவித்தார்.

Share
தொடர்புடையது
8556906 vijay
செய்திகள்இந்தியா

மாவீரர் தினத்தில் ‘தமிழ்த் தேசியத்திற்காகப் போராடிய மாவீரர்களை வணங்குவோம்’: தளபதி விஜய் நினைவுகூர்ந்து பதிவு!

தமிழ் மக்களின் விடுதலைக்காகப் போராடி வீர மரணமடைந்த மாவீரர்களை, தமிழ்த் வெற்றிக் கழகத்தின் (Tamilaga Vettri...

images 2 4
செய்திகள்இந்தியா

வெள்ளைக்கொடியுடன் சரணடைந்தவர்கள் எங்கே? சர்வதேசத்தின் மௌனம் ஏன்? சீமான் கேள்வி

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யைத் தொடர்ந்து, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானும் மாவீரர்...

images 12
செய்திகள்இலங்கை

டிட்வா புயல் திருகோணமலையிலிருந்து 50 கி.மீ தெற்கே மையம்; செட்டிக்குளத்தில் 315 மி.மீ அதிகபட்ச மழைவீழ்ச்சி பதிவு!

நாட்டில் நிலவும் மோசமான காலநிலைக்கான காரணமான ‘டிட்வா’ (DITWA) புயல் குறித்த முக்கியத் தகவலை வளிமண்டலவியல்...

Flood
செய்திகள்இலங்கை

அத்தனகலு ஓயாவைச் சுற்றியுள்ள தாழ்வான பகுதிகளில் பெரும் வெள்ள அபாயம்: மக்கள் உடனடியாக வெளியேற அறிவுறுத்தல்!

நாட்டில் நிலவி வரும் மோசமான வானிலை காரணமாக, அத்தனகலு ஓயாவைச் (Attanagalu Oya) சுற்றியுள்ள தாழ்வான...