17 9
இலங்கைசெய்திகள்

இலங்கை வருகிறார் இந்திய பிரதமர் மோடி

Share

இலங்கை வருகிறார் இந்திய பிரதமர் மோடி

இந்திய பிரதமர் நரேந்திர மோடி(Narendra Modi )இந்த வருடத்திற்குள் இலங்கைக்கு விஜயம் செய்வார் என கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் செவ்வாய்க்கிழமை (07) அறிவித்துள்ளது.

எனினும் அவர் வருகைக்கான திகதிகள் இன்னும் இரு தரப்பினராலும் முடிவு செய்யப்படவில்லை.

இந்திய உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜா(Santosh Jha) செய்தியாளர்களிடம் கூறுகையில், “இந்த பயணத்திற்கான சரியான நேரத்தை நாங்கள் உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளோம் என்றார்.

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க(Anura Kumara Dissanayake), டிசம்பரின் நடுப்பகுதியில் புதுடில்லிக்கு இரண்டு நாள் விஜயம் மேற்கொண்டிருந்த போது, பிரதமர் மோடியை  இலங்கை வருமாறு அழைப்பு விடுத்திருந்தார்.

அநுர குமார திஸாநாயக்க செப்டம்பரில் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட பின்னர் தனது முதல் விஜயமாக இந்தியாவை தேர்ந்தெடுத்தார். அத்துடன் திசாநாயக்க பொறுப்பேற்றவுடன் கொழும்புக்கு விஜயம் செய்த முதல் வெளிநாட்டு பிரமுகர் இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ் ஜெய்சங்கர்(Dr S Jaishankar) ஆவார்.

பிரதமர் மோடி 2015 முதல் 2017 வரை இரண்டு முறை இலங்கைக்கு விஜயம் செய்துள்ளார்.

திஸாநாயக்க விரைவில் சீனாவுக்கு விஜயம் செய்யவுள்ளார். அவர் 2025 ஜனவரி 14 முதல் ஜனவரி 17 வரை சீனாவுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொள்ளவுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் இன்று(07) அறிவித்தார்.

Share
தொடர்புடையது
22 4
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யாழ்ப்பாணத்திலிருந்து காணாமல் போன இரு மீனவர்கள் தமிழ்நாடு கடலோரப் பகுதியில் மீட்பு!

யாழ்ப்பாணம் காங்கேசன்துறை ஊரணி கடற்பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை மீன்பிடிக்கச் சென்ற நிலையில் காணாமல் போன இரண்டு...

21 4
செய்திகள்அரசியல்இலங்கை

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கு: சுரேஷ் சலே மூன்றாவது சந்தேகநபராகப் பெயரிடப்பட்டார்!

அரச புலனாய்வுச் சேவையின் (SIS) முன்னாள் பிரதானியும், ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரலுமான சுரேஷ் சலே, உயிர்த்த...

20 3
செய்திகள்உலகம்

அஸர்பைஜான் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான நிலையம் மற்றும் பாடசாலை இலக்கு!

மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றம் அண்டை நாடுகளுக்கும் பரவி வரும் நிலையில், அஸர்பைஜானின் கட்டுப்பாட்டில்...

19 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

போலி உறுதிப்பத்திரம் தயாரித்த பெண் சட்டத்தரணிக்கு 12 ஆண்டு சிறை: கொழும்பு மேல் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

கொழும்பு பொரளைப் பகுதியில் உள்ள பெறுமதியான காணியொன்றுக்குப் போலி உறுதிப்பத்திரங்களைத் தயாரித்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட பெண்...