16 9
உலகம்செய்திகள்

ஹமாஸ் அதிரடி அறிவிப்பு : புதிய தலைவர் தொடர்பில் வெளியான தகவல்

Share

ஹமாஸ் அதிரடி அறிவிப்பு : புதிய தலைவர் தொடர்பில் வெளியான தகவல்

புதிய தலைவரை நியமிப்பது குறித்து ஹமாஸ் (hamas)அமைப்பு ஆலோசித்து வருவதாகவும், விரைவில் இறுதி முடிவுக்கு வரலாம் என்றும் அந்த அமைப்பின் மூத்த அதிகாரி ஒசாமா ஹம்தான்( Osama Hamdan) தெரிவித்துள்ளார்.

கடந்த ஒக்டோபர் 17, 2024 அன்று காசா பகுதியில் இஸ்ரேல்(israel) நடத்திய வான் வழி தாக்குதலில் ஹமாஸ் அதன் முன்னாள் தலைவர் யஹ்யா சின்வார்(Yahya Sinwar) இறந்ததை உறுதிப்படுத்திய பின்னர் அவரது கருத்துக்கள் வந்துள்ளன.

அவரது தகவலின்படி, ஹமாஸ் அமைப்பு தனது எதிர்ப்பின் பாதையைத் தொடரும் உறுதிப்பாட்டை அவர் மீண்டும் உறுதிப்படுத்தினார், இந்த விருப்பத்தை எதுவும் நசுக்க முடியாது என்பதை வலியுறுத்தினார்.

காசாவில் இஸ்ரேல் ஆட்சியின் தொடர் அட்டூழியங்களை குறிப்பிட்டு, பாலஸ்தீனிய தேசத்தை அனைத்தையும் பறித்துவிட்டது என்று குறிப்பிட்ட அந்த அதிகாரி, போர்நிறுத்த பேச்சுவார்த்தையில்,முற்றுகையிடப்பட்ட பாலஸ்தீனப் பகுதியிலிருந்து ஆக்கிரமிப்புப் படைகள் பின்வாங்க வேண்டியதன் அவசியத்தை ஹமாஸ் வலியுறுத்தியுள்ளது.

தற்போது அந்த அமைப்பு தலைவர் இல்லாமலேயே இயங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
world 53
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வெல்லம்பிட்டியில் 4 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருட்கள் மீட்பு: இருவர் கைது

கொழும்பு, வெல்லம்பிட்டி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் (PNB) நேற்று (மே...

world 52
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கொழும்பில் பிடிபட்ட 74 வியட்நாமியர்களுக்கு மே 14 வரை விளக்கமறியல்: நீதிமன்றம் அதிரடி உத்தரவு

கொழும்பு, கொள்ளுப்பிட்டி பகுதியில் உள்ள உத்தராநந்த மாவத்தையில் அமைந்துள்ள குடியிருப்பு வளாகம் ஒன்றில் வைத்து, இணையவழி...

world 51
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஊழலுக்கு எதிராகக் குரல் கொடுத்துப் பதவி விலகிய NPP உறுப்பினர்: ராஜினாமா கடிதம் கசிந்த விவகாரத்தில் சர்ச்சை

தேசிய மக்கள் சக்தி (NPP) கட்சியின் குருநாகல் மாநகர சபை உறுப்பினர் பி.டபிள்யூ. பிரேமச்சந்திரா, தனது...

world 50
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தோல் புற்றுநோய் அபாயம்: காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை அவதானம் தேவை

இலங்கையில் தோல் புற்றுநோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகச் சுகாதார மேம்பாட்டுப் பணியகம் எச்சரிக்கை விடுத்துள்ளது....