14 9
இலங்கைசெய்திகள்

வெளிநாடொன்றில் விற்பனையில் சாதனை படைத்த பாரிய மீன்

Share

வெளிநாடொன்றில் விற்பனையில் சாதனை படைத்த பாரிய மீன

ஜப்பானில் நடைபெற்ற மீன் ஏலத்தில் மிகப்பெரிய சூரை மீன் ஒன்று 1.3 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு விற்பனை செய்யப்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

276 கிலோகிராம் எடையுள்ள மோட்டார் சைக்கிள் அளவுக்குப் பெரிய இந்த மீனை நாட்டில் உள்ள பிரபல உணவக உரிமையாளர் ஒருவர் கொள்வனவு செய்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் மேலும் தெரிவித்துள்ளன.

ஜப்பானிய மீன் ஏல வரலாற்றில் இரண்டாவது அதிக விலைக்கு விற்கப்பட்ட மீன் என்ற சாதனைப் புத்தகத்தில் இந்த மீன் நுழைந்ததாகவும், அதற்கு முன் 2019 இல் 278 கிலோ எடை கொண்ட மீன் 3.1 மில்லியன் டொலர்களுக்கு விற்கப்பட்டதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.

மீன்களை கொள்வனவு செய்த ஒனோடெரா குழுமம் தொடர்ச்சியாக ஐந்தாவது முறையாக அதிக விலைக்கு மீனை கொள்வனவு செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த வருடம் நடைபெற்ற மீன் ஏலத்தில் மீன் ஒன்றை கொள்வனவு செய்வதற்கு குறித்த நிறுவனம் 7 இலட்சம் டொலர்களுக்கு மேல் செலவிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது

Share
தொடர்புடையது
Shooting 3
இலங்கை

இன்றைய தினம் நாட்டில் மற்றுமொரு துப்பாக்கிச்சூடு.

இன்று மாலை, கொழும்பு – தெமட்டகொடை, குப்பியாவத்தை மயானத்திற்கு அருகில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில்...

Shooting 2
இலங்கை

காவல்துறை உத்தியோகத்தரின் மீது துப்பாக்கி பிரயோகம்.

பெலியத்த, வலவல பகுதியில், திக்வெல்ல காவல் நிலையத்தில் கடமைற்றும் காவல்துறை உத்தியோகத்தர் ஒருவரின் வீட்டின் மீது...

dead body 1
இலங்கை

நீரில் மூழ்கிய சிறுவன் சடலமாக மீட்பு.

நேற்று மாலை, கம்பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வெலிகல்ல – உடோவிட்ட பகுதியில், நான்கு சிறுவர்கள் இணைந்து...

low r 2
இலங்கை

க.பொ.த உயர்தரப் பரீட்சை பிற்போட படுமா? – நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு.

இவ்வருடம் க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கு முதலாம் மற்றும் இரண்டாம் தடவைகளாகத் தோற்றவுள்ள மாணவர் குழுவொன்றினால் தாக்கல்...