4 5
இலங்கைசெய்திகள்

இரத்து செய்யப்படும் விடுமுறை கொடுப்பனவு: ஜனாதிபதியை நாடும் முக்கிய தரப்பு

Share

இரத்து செய்யப்படும் விடுமுறை கொடுப்பனவு: ஜனாதிபதியை நாடும் முக்கிய தரப்பு

விடுமுறை கொடுப்பனவை இரத்து செய்யும் முடிவை மாற்றுமாறு ஜனாதிபதியை சந்தித்து கோரிக்கை விடுக்க நாடாளுமன்ற ஊழியர்கள் தயாராகி வருகின்றதாக கூறப்படுகிறது.

ஜனாதிபதி அடுத்தவாரம் நாடாளுமன்றத்திற்கு விஜயம் செய்யவுள்ளமையினால் அப்போது இந்த கோரிக்கையை முன்வைக்க எதிர்பார்த்துள்ளதாக ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.

பொருளாதார நெருக்கடிகளை கருத்தில் கொண்டு நாடாளுமன்ற ஊழியர்களின் விடுமுறை கொடுப்பனவை இரத்து செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

அத்துடன் நாடாளுமன்ற ஊழியர்களுக்கு மாத்திரம் இந்த கொடுப்பனவு வழங்கப்படுமாயின் அரச சேவையில் பிரச்சினைக்குரிய நிலைமை ஏற்படும் என பொருளாதார நிபுணர்கள் அரசாங்கத்திற்கு சுட்டிக்காட்டியுள்ளனர்.

இந்த விடுமுறை கொடுப்பனவு நீண்ட காலமாக நாடாளுமன்ற ஊழியர்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றது.

இந்த நிலையில், விடுப்பு கொடுப்பனவு ரத்து செய்யப்பட்டதால், நாடாளுமன்ற ஊழியர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...