23 2
இலங்கைசெய்திகள்

அரச இணையத்தளங்கள் மீது சைபர் தாக்குதல் – முடங்கிய சேவைகள் வழமைக்கு

Share

அரச இணையத்தளங்கள் மீது சைபர் தாக்குதல் – முடங்கிய சேவைகள் வழமைக்கு

சைபர் தாக்குதலுக்கு உள்ளான அரச அச்சகத் திணைக்களத்தின் இணையத்தளமும் (Department of Government Printing) காவல்துறையின் யூடியூப் சேனலும் தற்போது மீளமைக்கப்பட்டு வருவதாக இலங்கை கணினி அவசர செயற்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.

இன்று (02) தினத்திற்குள் இவற்றை வழமைக்கு கொண்டு வர முடியும் என அதன் பிரதம தகவல் பாதுகாப்பு அதிகாரி நிரோஷ் ஆனந்த தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், குறித்த சைபர் தாக்குதல்களை எந்த தரப்பினர் நடத்தினர் என்பது குறித்த உறுதியான தகவல்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை அச்சகத் திணைக்களத்தின் (Department of Government Printing) இணையத்தளம் மீது சைபர் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டு அதன் தரவுகள் மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த தகவலை இலங்கை கணினி அவசரகால பதிலளிப்பு குழு பிரதான தகவல் பாதுகாப்பு அதிகாரி நிரோஷ் ஆனந்த (Nirosh Ananda) தெரிவித்துள்ளார்.

அரச நிறுவனங்கள் முழுவதும் சைபர் பாதுகாப்பை வலுப்படுத்த ஒரு விரிவான உத்தி உருவாக்கப்பட்டுள்ளதாக இலங்கை கணினி அவசரகால பதிலளிப்பு குழு தெரிவித்திருந்தது.

இவ்வாறான சூழ்நிலையில் தற்போது இடம்பெற்ற சைபர் தாக்குதல் தொடர்பில் இலங்கை கணினி அவசர பதிலளிப்பு மன்றம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

அச்சகத் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் அனுமதியின்றி ஒருவர் பிரவேசித்துள்ளதாக அதன் பிரதான தகவல் பாதுகாப்பு அதிகாரி நிரோஷ் ஆனந்த தெரிவித்துள்ளார்.

தற்போது குறித்த இணையத்தளம் வேறு வெளி தரப்பினரால் பயன்படுத்தப்பட்டு வருவது அவதானிக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும், சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இலங்கை கணினி அவசர பதிலளிப்பு மன்றத்தின் பிரதான தகவல் பாதுகாப்பு அதிகாரி நிரோஷ் ஆனந்த தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இலங்கை பொலிஸின் யூடியூப் சேனல் மீதும் சைபர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
1200 675 25784797 717 25784797 1768041834025
விளையாட்டுசெய்திகள்

என் விதியில் இருப்பதை யாரும் பறிக்க முடியாது: டி20 உலகக் கோப்பை புறக்கணிப்பு குறித்து ஷுப்மன் கில் உருக்கம்!

அடுத்த மாதம் நடைபெறவுள்ள ஐசிசி டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் தான் சேர்க்கப்படாதது குறித்து,...

image b3ba06ad00
இலங்கைஅரசியல்செய்திகள்

அனுராதபுரத்தில் பரபரப்பு: விகாரையின் தர்ம போதனை மண்டபத்தில் புதையல் தோண்டிய தேரர் கைது!

அனுராதபுரம், கால திவுல்வெவ பகுதியில் உள்ள விகாரையொன்றில் புதையல் தோண்டிக் கொண்டிருந்த தேரர் ஒருவர் பொலிஸாரால்...

gold man hari nadar arrested againg by chennai central crime branch for defrauding businessman of rs 100 crore as loan in bangalore
செய்திகள்இலங்கைபிராந்தியம்

35 கோடி கடன் பெற்றுத் தருவதாக ரூ. 70 லட்சம் மோசடி: பனங்காட்டு படை கட்சி ஒருங்கிணைப்பாளர் ஹரி நாடார் கைது!

தொழிலை விரிவுபடுத்த கடன் பெற்றுத் தருவதாகக் கூறி தொழிலதிபர் ஒருவரிடம் 70 லட்சம் ரூபாய் மோசடி...