12 30
இலங்கைசெய்திகள்

ஐ.தே.கவை அழிக்க இடமளியோம்! ரவி கருணாநாயக்க எம்.பி. திட்டவட்டம்

Share

ஐ.தே.கவை அழிக்க இடமளியோம்! ரவி கருணாநாயக்க எம்.பி. திட்டவட்டம்

ஐக்கிய தேசியக் கட்சியை ஒரு சிலர் பணயக் கைதியாகப் பயன்படுத்த முற்படுகின்றனர். எனினும், கட்சியை அழிப்பதற்கு இடமளிக்க முடியாது என்று நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறுகையில்,

ரணில் விக்ரமசிங்கவுக்கு அடுத்தபடியாக ஐக்கிய தேசியக் கட்சியில் உள்ள சிரேஷ்ட உறுப்பினர் நான்தான். எனவே, ஒரு சிலரின் தனிப்பட்ட தேவைக்காகக் கட்சியை அழிக்க இடமளிக்க முடியாது.

மக்களின் கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியைப் பாதுகாக்க வேண்டும். கட்சியை விட்டுச் சென்றவர்களும் மீள வரவேண்டும். ஒரு சிலருக்காக எமது கட்சியைப் பணயக் கைதியாகப் பயன்படுத்த இடமளிக்க முடியாது.

இந்த நாட்டில் பாரிய மாற்றங்களை ஏற்படுத்திய கட்சியே ஐக்கிய தேசியக் கட்சியாகும். அக்கட்சியை பழைய நிலைமைக்குக் கொண்டுவர வேண்டும் என குறிப்பிட்டள்ளார்.

Share
தொடர்புடையது
சரத் அபேகோன்n
இலங்கை

பதிவி ஏற்கும்போதே ஜனாதிபதியிடம் குறிப்பிட்டேன்.

மத்திய மாகாண ஆளுநர் பதவியிலிருந்து விலகுவதாகத் தெரிவித்து, ஜனாதிபதிக்குத் தான் அனுப்பிய கடிதத்திற்கு இதுவரை எந்தவொரு...

yositha 1
இலங்கை

ஒத்திவைக்கப்பட்டது யோஷிதவின் வழக்கு.

பணமோசடித் தடுப்புச் சட்டத்தின் கீழ் யோஷித ராஜபக்ஷவுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு கொழும்பு மேல்...

arested 3
இலங்கை

வெளிநாட்டு குண்டுகளுடன் ஒருவர் கைது – கைப்பற்றப்பட்ட ஆயுத தொகுதி !

யக்கல பிரதேசத்தில் வைத்து, ராகமவைச் சேர்ந்த 42 வயதுடைய நபரொருவர் 2 கையெறி குண்டுகள் மற்றும்...

arrest warrant d
இலங்கை

முக்கிய நபர்கள் மீது பிறப்பிக்கப்பட்ட பிடியாணை உத்தரவு.

நகர அபிவிருத்தி பிரதி அமைச்சர் எரங்க குணசேகர மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் மனுவர்ண உள்ளிட்ட...