16 32
இலங்கைசெய்திகள்

இலங்கை அணிக்கு 187 ஓட்டங்கள் வெற்றி இலக்கு

Share

இலங்கை அணிக்கு 187 ஓட்டங்கள் வெற்றி இலக்கு

இலங்கை (Srilanka) அணிக்கும் நியூசிலாந்து (New Zealand) அணிக்கும் இடையிலான இருபதுக்கு 20 ஓவர் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி 20 ஓவர்கள் நிறைவில் 05 விக்கெட்டுக்களை இழந்து 186 ஓட்டங்களை பெற்றுள்ளது.

துடுப்பாட்டத்தில் நியூசிலாந்து அணி சார்பில் மார்க் சேப்மன் (Mark Chapman) அதிகபட்சமாக 42 ஓட்டங்களையும் Tim Robinson மற்றும் Mitchell Hay ஆகியோர் தலா 41 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்து வீச்சில் இலங்கை அணி சார்பில் வனிந்து அசரங்க (Wanindu Hasaranga) 02 விக்கெட்டுக்களையும், நுவன் துஷார (Nuwan Thushara), மதீஷா பத்திரன (Matheesha Pathirana) ஆகியோர் தலா ஒரு விக்கெட்டினை வீழ்த்தியுள்ளனர்.

இதன்படி இலங்கை அணிக்கு 187 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இலங்கை கிரிக்கெட் அணியானது ஒருநாள் மற்றும் ரி20 விளையாடுதற்காக நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது.

இரு அணிகளுக்கிடையில் 3 போட்டிகள் கொண்ட ரி20 மற்றும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் என்பன நடைபெறவுள்ளன.

அதன் படி முதல் தொடராக ரி20 தொடர் தற்போது நடைபெற்று வருகிறது.

இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான 3 போட்டிகள் கொண்ட ரி20 சர்வதேச தொடரின் இரண்டாவது போட்டி இன்று இலங்கை நேரப்படி முற்பகல் 11.45 மணிக்கு மவுங்கானுவில் அமைந்துள்ள பேய் ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் ஆரம்பமாகிறது.

இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து அணி 8 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

முதல் போட்டியில் தோல்வியடைந்த இலங்கை அணி இன்றைய போட்டியில் நியூசிலாந்துக்கு பதிலடி கொடுக்கும் என்ற முனைப்புடன் களமிறங்கவுள்ளது.

Share
தொடர்புடையது
MediaFile 1 7
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வென்னப்புவையில் அதிரடி: 800 கிலோவிற்கும் அதிகமான சுறா மீன்களுடன் 7 பேர் கைது!

வென்னப்புவ பகுதியில் சட்டவிரோதமாகப் பிடிக்கப்பட்ட பெருந்தொகையான சுறா மீன்களுடன் 7 சந்தேகநபர்களைக் கரையோரப் பாதுகாப்புத் திணைக்கள...

im 83941943
செய்திகள்உலகம்

சீன இராணுவத்தில் அதிரடி சுத்திகரிப்பு: மிகச்சக்திவாய்ந்த ஜெனரல் ஜாங் யௌஷியா விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்!

ஒழுக்கக் குறைபாடு மற்றும் சட்ட மீறல்கள் தொடர்பாக, சீன இராணுவத்தின் மிக உயர்ந்த பதவியில் உள்ள...

Untitled 113 2
இலங்கைசெய்திகள்

தனியார் மற்றும் அரை அரசு ஊழியர்களுக்கும் ஓய்வூதியம்: EPF நிதியில் மாற்றமில்லை என அரசாங்கம் உறுதி!

தனியார் மற்றும் அரை அரசு துறைகளில் பணியாற்றும் ஊழியர்களின் எதிர்காலப் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில், அவர்களுக்கெனப்...

sajith rw 2 800x533
செய்திகள்அரசியல்இலங்கை

சஜித் மற்றும் ஐதேக தலைவர்களுக்கு இடையில் தீர்க்கமான சந்திப்பு!

இலங்கையின் பிரதான அரசியல் கட்சிகளான ஐக்கிய தேசியக் கட்சி (UNP) மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி...