13 31
இலங்கைசெய்திகள்

கடந்த கால அரசாங்கத்தின் மின்சார வாகன இறக்குமதி திட்டம் குறித்து வெளியான தகவல்

Share

கடந்த கால அரசாங்கத்தின் மின்சார வாகன இறக்குமதி திட்டம் குறித்து வெளியான தகவல்

கடந்த அரசாங்க நிர்வாகத்தின் சர்ச்சைக்குரிய மின்சார வாகன இறக்குமதி திட்டத்தின்கீழ், இரண்டு நிறுவனங்களுக்கு மாத்திரமே அனுமதி வழங்கப்பட்டிருந்தமை தெரியவந்துள்ளது.

புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு இந்த வசதியை வழங்குவதற்காக, 31 நிறுவனங்கள், தம்மை பதிவு செய்திருந்தபோதும், குறித்த இரண்டு நிறுவனங்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டதாக தேசிய கணக்காய்வு அலுவலகம் கண்டறிந்துள்ளது.

வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கையர்கள், நாட்டுக்கு அனுப்பும் வெளிநாட்டு பணத்தின் அடிப்படையில், அவர்களுக்கு மின்சார வாகன அனுமதிகளை வழங்குவதற்கான வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு இந்த திட்டத்தை முன்னெடுத்திருந்தது.

எனினும் இந்த திட்டத்தின்கீழ் ஒட்டோ கேபிடல் இன்வெஸ்ட்மென்ட் (பிரைவேட்) லிமிடெட் 335 அனுமதிகளுக்கும், ஓவர்லேண்ட் ஒட்டோ மொபைல் 305 உரிமதாரர்களுக்கும் வாகனங்களை இறக்குமதி செய்து வழங்கியுள்ளன.

அதன்படி, குறித்த இரண்டு நிறுவனங்களும் மொத்த அனுமதிகளில் 64 சதவீதத்தை வழங்கியுள்ளன.

இந்த திட்டத்தின் கீழ் இறக்குமதி செய்யப்பட்ட 375 மின்சார வாகனங்கள் மட்டுமே ஜூலை 9 ஆம் திகதி நிலவரப்படி பதிவு செய்யப்பட்டுள்ளன.

அத்துடன் வாகன உரிமதாரர்களால் 84 வாகனங்கள் மூன்றாம் தரப்பினருக்கு வழங்கப்பட்டன.

வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சக கோப்புத் தகவல்களின்படி, இந்த வசதியைப் பயன்படுத்திய புலம்பெயர்ந்த தொழிலாளர்களில் 164 பேர கடற்படையினர், 150 முகாமையாளர்கள், மற்றும் 96 இயக்குநர்கள், 78 பொறியாளர்கள், 61 அதிகாரிகள் 24 ஆலோசகர்கள், ஒரு சர்வதேச கிரிக்கெட் நடுவர் மற்றும் மூன்று மருத்துவர்கள் உள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை இந்த வாகன இறக்குமதிகளின் போது அடிப்படை விதிகள் கூட மீறப்பட்டுள்ளதாக கண்றியப்பட்டுள்ளது.

உதாரணமாக, இந்தத் திட்டத்தைப் பெற விரும்பும் ஒவ்வொரு இலங்கை புலம்பெயர்ந்தவரும் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தில் பதிவு செய்திருக்க வேண்டும்.

எனினும் அனுமதியை கொண்டிருக்கும் 1,000 பேரில் 286 பேர் மட்டுமே தம்மை பதிவு செய்துள்ளனர்.

Share
தொடர்புடையது
ahr0chm6ly9jyxnzzxr0zs5zcghkawdp 4
உலகம்செய்திகள்

துப்பாக்கியைப் பிடுங்கிய ‘ஹீரோ’ அஹமது அல் அஹமதுவைச் சந்தித்த பிரதமர் அல்பானீஸ்; துப்பாக்கிக் கட்டுப்பாடு மேலும் அதிகரிப்பு!

அவுஸ்திரேலியாவின் சிட்னியில் உள்ள போண்டி கடற்கரையில் (Bondi Beach) யூதர்கள் நிகழ்வில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டின்போது, துணிச்சலுடன்...

coverimage 01 1512114047 1546165239 1562741874
இலங்கைசெய்திகள்

இலங்கையில் எயிட்ஸ் தொற்று 6% அதிகரிப்பு:உயிரிழப்புகள் 30 ஆகப் பதிவு!

இலங்கையில் எயிட்ஸ் தொற்று அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. அதன்படி, 2025ஆம் ஆண்டின் முதல் 9 மாதங்களில்...

images 5 5
உலகம்செய்திகள்

இந்தியா-ரஷ்யா இராணுவ ஒப்பந்தம்: ‘தளவாட ஆதரவு பரஸ்பரப் பரிமாற்ற’ சட்டத்துக்குப் புட்டின் ஒப்புதல்!

இந்தியா மற்றும் ரஷ்யா இடையேயான ‘Reciprocal Exchange of Logistics Support’ (தளவாட ஆதரவின் பரஸ்பரப்...

articles2FvNVHzqk0rGKKgejyoUzJ
இலங்கைசெய்திகள்

கல்வி ஒத்துழைப்பு வலுப்படுத்தல்: வெளிநாட்டு நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்ய அமைச்சரவை அனுமதி!

கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சராகப் பிரதமர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இந்த...