11 25
இலங்கைசெய்திகள்

மத்தள விமான நிலையத்திற்கு சுற்றுலா பயணிகளுடன் முதன்முறையாக தரையிறங்கிய விமானம்

Share

மத்தள விமான நிலையத்திற்கு சுற்றுலா பயணிகளுடன் முதன்முறையாக தரையிறங்கிய விமானம்

முதன்முறையாக 180 பல்கேரிய(Bulgaria) சுற்றுலா பயணிகளை ஏற்றிக்கொண்டு ஐரோப்பிய விமான சேவைக்கு சொந்தமான விமானம் ஒன்று பல்கேரியாவின் சோபியா விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு நேற்று (27ம் திகதி) காலை 9.30 மணியளவில் மத்தள விமான நிலையத்தில்(mattala airport) தரையிறங்கியது.

புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததன் பின்னர், சுற்றுலா அமைச்சுக்கும் ஐரோப்பிய விமான சேவைக்கும் இடையிலான பேச்சுவார்த்தையின் பின்னர் இந்த விமானம் மத்தள விமான நிலையத்தை வந்தடைந்தது.

கடந்த காலங்களில் மத்தள விமான நிலையம் அவசர தரையிறங்கும் இடமாக மட்டுமே மாறியிருந்தது. எவ்வாறாயினும், புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததன் பின்னர் வாரத்திற்கு 15க்கும் மேற்பட்ட விமானங்கள் மத்தள ராஜபக்ச விமான நிலையத்திற்கு சுற்றுலா பயணிகளுடன் வந்து செல்கின்றன.

இதுவரை, மத்தள விமான நிலையத்தைப் பயன்படுத்தி வந்த பெரும்பாலான சுற்றுலாப் பயணிகள் ரஷ்யா மற்றும் தொடர்புடைய நாடுகளில் இருந்து வந்தவர்கள்.

ஆனால் தற்போது ஐரோப்பிய விமான நிறுவனங்களும் சுற்றுலா பயணிகளை மத்தளவுக்கு அழைத்து வருகின்றன. மத்தளவில் இருந்து நாட்டுக்கு வந்த சுற்றுலா பயணிகள் குழு மற்றும் விமான குழுவினரால் மத்தள விமான நிலையத்தில் வரவேற்கப்பட்டனர்.

Share
தொடர்புடையது
world 56
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஜும்ஆ பிரசங்கங்களின் போது நிதானத்தைப் பேணுமாறு உலமாக்களுக்கு அறிவுறுத்தல்!

நாட்டின் தற்போதைய சூழல் மற்றும் சர்வதேச விவகாரங்களைக் கருத்திற்கொண்டு, ஜும்ஆ பிரசங்கங்களின் போது கதீப்மார்கள் மற்றும்...

world 55
செய்திகள்இலங்கைபிராந்தியம்

புத்தாண்டு விசேட போக்குவரத்துத் திட்டம் ஆரம்பம்: கொழும்பிலிருந்து 2,300 மேலதிக பேருந்துகள் சேவையில்!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு கொழும்பிலிருந்து தமது சொந்த இடங்களுக்குச் செல்லும் பயணிகளுக்காக விசேட...

world 54
செய்திகள்இலங்கை

நெதன்யாகு மீதான ஊழல் வழக்கு மீண்டும் தொடக்கம்; ஈரானின் கடும் விமர்சனம்!

இஸ்ரேலில் ஈரான் உடனான போர் காரணமாக அறிவிக்கப்பட்டிருந்த அவசரநிலை நீக்கப்பட்டதைத் தொடர்ந்து, பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு...

world 53
செய்திகள்உலகம்

மத்திய கிழக்கு போர்நிறுத்தம்: ஜெருசலேமின் புனிதத் தலங்கள் மீண்டும் திறப்பு!

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள தற்காலிக போர்நிறுத்தத்தைத் தொடர்ந்து, ஜெருசலேமில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க புனிதத் தலங்கள்...