4 53
இலங்கைசெய்திகள்

வேறு கட்சியில் போட்டியிட்டோர் அதிரடியாக நீக்கம் : தமிழரசு மத்திய செயற்குழுவின் தீர்மானம்

Share

வேறு கட்சியில் போட்டியிட்டோர் அதிரடியாக நீக்கம் : தமிழரசு மத்திய செயற்குழுவின் தீர்மானம்

கடந்த தேர்தலில் தமிழரசுக்கட்சியில் இருந்து விலகி வேறுகட்சிகள் அல்லது சுயேட்சைக்குழுக்கள் ஊடாக தேர்தலில் போட்டியிட்டவர்கள் கட்சியிலிருந்து உடனடியாக நீக்கப்பட்டுவதாக தமிழரசுக்கட்சியின் பேச்சாளர் எம்.எ.சுமந்திரன் மகிந்தவிற்கு வழங்கப்பட்ட வாக்குறுதி – வெளிப்படுத்தும் சுமந்திரன்தெரிவித்துள்ளதுடன் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பின் சி. சிவமோகன் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்

குறித்த விடயத்தை வவுனியாவில் இன்று (28) இடம்பெற்ற மத்தியகுழு கூட்டத்தின் இறுதியில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் குறிப்பிட்டுள்ளார். .

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், கட்சியின் உறுப்பினரான சிவமோகன் மீது தேர்தல்காலங்களில் கட்சியினுடைய வேட்பாளர்களை நேரடியாக தாக்கி ஊடக சந்திப்புக்களை நடாத்தியமை உட்பட பல குற்றச்சாட்டுக்கள் இருப்பதால் அவரை கட்சியிலிருந்து இடைநிறுத்தி விளக்கம் கோருவது என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அரியநேத்திரன் ஏற்கனவே இடைநிறுத்தப்பட்டிருக்கிறார் அவரையும் கட்சியிலிருந்து விலக்கலாம் என்ற பிரேரணையும் முன்வைக்கப்பட்டிருக்கிறது.

அத்துடன் கடந்ததேர்தலில் கட்சிக்குஎதிரான வகையில் வேறு கட்சிகளோடு அல்லது சுயேட்சைகுழுக்களோடு இணைந்து போட்டியிட்டவர்கள் அனைவரையும் உடனடியாக கட்சியில் இருந்து விலக்குவதாக மத்திய செயற்குழு தீர்மானம் எடுத்துள்ளது.

அவ்வாறனவர்களின் பெயர்கள் எல்லாம் வர்த்தமானியில் உள்ளது அத்துடன் வேறுகட்சிகள் மற்றும் குழுக்களுக்காக பிரச்சாரம்செய்தவர்கள் மற்றும் கட்சியின் முடிவுகளுக்கு மாறாக ஜனாதிபதிதேர்தலில் பிரச்சாரம் செய்தவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் சிலருக்கு எதிராக எடுக்கப்பட்டிருக்கிறது” என அவர் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
Untitled 74
செய்திகள்இலங்கைபிராந்தியம்

களுத்துறை பொலிஸ் கல்லூரி பட்டமளிப்பு விழா: 280 அதிகாரிகள் நியமனம்!

களுத்துறை பொலிஸ் கல்லூரியில் தங்களது அடிப்படைப் பயிற்சியை வெற்றிகரமாக நிறைவு செய்த 280 பயிலுநர் பொலிஸ்...

செய்திகள்இலங்கைபிராந்தியம்

1990 ஆம்புலன்ஸ் சேவையின் புதிய அலுவலகம் திறப்பு!

இலங்கையின் இலவச அவசர ஆம்புலன்ஸ் சேவையான ‘1990 சுவசெரிய’ (1990 Suwa Seriya) திட்டத்தின் புதிய...

Untitled 73
செய்திகள்உலகம்

50 ஆண்டுகளுக்குப் பின் நிலவுப் பயணம்: விண்வெளியில் இருந்து பூமி ‘தலைகீழாக’ தெரியும் அற்புதப் புகைப்படம்!

சுமார் அரை நூற்றாண்டு கால இடைவெளிக்குப் பிறகு, மனிதர்களை மீண்டும் நிலவுக்கு அழைத்துச் செல்லும் நாசாவின்...

Untitled 72
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாளை இலங்கைக்கு 25,000 மெட்ரிக் தொன் உரம்: சிறுபோகச் சாகுபடிக்குத் தட்டுப்பாடின்றி விநியோகம்!

இலங்கையின் விவசாயத் துறைக்குத் தேவையான 25,000 மெட்ரிக் தொன் உரத் தொகையினைச் சுமந்து வரும் பிரம்மாண்டக்...