3 1 9
இலங்கைசெய்திகள்

மீண்டும் காவல்துறையில் நடிகர் அல்லு அர்ஜீன் : தொடரும் குற்றச்சாட்டுக்கள்

Share

மீண்டும் காவல்துறையில் நடிகர் அல்லு அர்ஜீன் : தொடரும் குற்றச்சாட்டுக்கள்

தெழுங்கு நடிகர் அல்லு அர்ஜீன் மீண்டும் காவல்துறையில் முன்னிலையாகியுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

புஷ்பா 2 சிறப்பு காட்சியைப் பார்க்க நடிகர் அல்லு அர்ஜூன் சென்றபோது ஏற்பட்ட கூட்டநெரிசலில் சிக்கி 35 வயதுடைய பெண் அண்மையில் உயிரிழந்தார்.

அவரது மகனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்ற நிலையில் இதுதொடர்பான வழக்கில் நடிகர் அல்லு அர்ஜூன் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டார்.

இதையடுத்து, இவரது கைது நடவடிக்கை தெலுங்கானா மாநில சட்டசபை வரை சென்ற நிலையில், அல்லு அர்ஜூன் மீதான நடவடிக்கை சரியானது என முதல் மந்திரி ரேவந்த் ரெட்டி விளக்கம் அளித்ததுடன் அல்லு அர்ஜூன் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தார்.

முதல் மந்திரியின் குற்றச்சாட்டுகளுக்கு மறுப்பு தெரிவித்த அல்லு அர்ஜூன், என்னைப் பற்றி பொய்யான செய்திகள் பரப்பப்பட்டு வருவதாகவும் நான் எந்தத் துறையையும் மற்றும் அரசியல்வாதியையும் குறைசொல்ல விரும்பவில்லை என அவர் தெரிவித்திருந்தார்.

இதையடுத்து, காங்கிரஸ் கட்சியினரும் மற்றும் அல்லு அர்ஜூன் தரப்பினரும் மாறி மாறி குற்றம்சாட்டி வருகின்றமை தொடர்பில் தொடர்ச்சியாக செய்திகள் வெளியாகிய வண்ணம் உள்ளன.

இவ்வாறான சூகூழ்நிலையில், ஐதராபாத்தில் உள்ள நடிகர் அல்லு அர்ஜூன் வீடு மீது கற்களை வீசி உஸ்மானியா பல்கலைக்கழக மாணவ அமைப்பினர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இந்தநிலையில், திரையரங்க சம்பவத்தை தொடர்ந்து காவல் நிலையத்தில் முன்னிலையாகுமாறு நடிகர் அல்லு அர்ஜூனுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

இதனடிப்படையில், இன்று (25) காலை 11 மணிக்கு முன்னிலையாகுமாறு சிக்கடாபள்ளி காவல்துறையினர் சம்மன் அனுப்பியுள்ளனர்.

இதையடுத்து, ஐதராபாத் சிக்கடாபள்ளி காவல் நிலையத்தில் நடிகர் அல்லு அர்ஜூன் இரண்டாவது முறையாக இன்று முன்னிலையாகியுள்ளார்.

அவருடன் அவரது வழக்கறிஞர் காவல் நிலையத்திற்கு வருகை தந்திருந்ததுடன் நடிகர் அல்லு அர்ஜூனிடம் காவல்துறையினர் சுமார் இரண்டு மணிநேரத்திற்கும் மேலாக விசாரணை நடந்தியுள்ளனர்.

அந்த விசாரணையில் அல்லு அர்ஜுனிடம் 20 இற்கும் மேற்பட்ட கேள்விகள் கேட்கப்பட்டதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்நிலையில் அல்லு அர்ஜுனின் பவுன்சராக இருந்த ஆண்டனி என்பவரும் தற்பொழுது கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபர் சம்பவம் நடந்த அன்று ரசிகர்களை தள்ளி விட்டமைதான் கூட்ட நெரிசலுக்கு மிக முக்கிய காரணமாக அமைந்துள்ளதென தெரிவிக்கப்பட்டு அவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் சந்தியா தியேட்டருக்கு அழைத்து சென்று அன்று நடந்ததை மீண்டும் செய்து காட்ட காவல்துறையினர் உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
550001 uranium found in breast milk
செய்திகள்இலங்கை

பீகார் தாய்மார்களின் தாய்ப்பாலில் யுரேனியம் கண்டுபிடிப்பு: குழந்தைகளுக்கு சுகாதார அபாயம் குறித்த ஆய்வு!

இந்தியாவின் பீகார் மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த பாலூட்டும் தாய்மார்களின் தாய்ப்பாலில் அபாயகரமான அளவில் யுரேனியம்...

articles2Fy4vlsuAHR6AX2UIg2KXs
செய்திகள்இலங்கை

360 மில்லியனுக்கு 3 மில்லியன் விசர் நாய்க்கடி தடுப்பூசிகளை கொள்முதல் செய்ய அமைச்சரவை ஒப்புதல்!

மனிதப் பயன்பாட்டிற்காக ரூபாய் 360 மில்லியன் மதிப்புள்ள 3,000,000 செயலற்ற விசர் நாய்க்கடி தடுப்பூசிகளை (0.5...

images 7
செய்திகள்இலங்கை

தேசிய பயிற்சி ஆணைக்குழுக்களில் தமிழ் மாணவர்களைத் தக்கவைக்க: அடுத்த வருடம் முதல் தமிழ் மொழி ஆசிரியர்கள் நியமனம்!

தேசியப் பயிற்சி மற்றும் தொழில்துறைப் பயிற்சி ஆணைக்குழுக்களில் (National Training and Industrial Training Commissions)...

27f94221 21fe 4856 affc d708e18f170d 1
செய்திகள்இலங்கை

கதிர்காமம் அரச மரத்தில் ஏறி இடையூறு விளைவித்த இளைஞன் கைது!

கதிர்காமம் தேவாலயத்திற்குப் பின்னால் உள்ள அரச மரத்தில் ஏறி இடையூறு விளைவிக்கும் வகையில் நடந்துகொண்டதாகக் கூறப்படும்...