6 78
இலங்கைசெய்திகள்

அரிசிக்கான கட்டுப்பாட்டு விலை குறித்து அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு

Share

அரிசிக்கான கட்டுப்பாட்டு விலை குறித்து அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு

அரிசிக்கான கட்டுப்பாட்டு விலையில் மாற்றம் மேற்கொள்வது தொடர்பில் அரசாங்கம் எந்தவொரு கலந்துரையாடலையும் முன்னெடுக்கவில்லை என அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ (Nalinda Jayatissa) தெரிவித்துள்ளார்.

நாட்டில் நிலவும் அரிசிக்கான தட்டுப்பாட்டை நிவர்த்திக்கும் வகையில், அனுமதிப்பத்திரமின்றி அரிசி இறக்குமதி செய்வதற்கான கால அவகாசத்தை எதிர்வரும் 10ஆம் திகதிவரை நீடிக்கும் யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

அதேநேரம், அமைச்சரவை அங்கீகரித்த அளவுக்கு அரிசியை இறக்குமதி செய்வதற்கு அரசாங்கத்துக்கு இயலாமல் போயுள்ளதாகவும், எதிர்வரும் காலங்களில் விநியோகஸ்தர்களிடமிருந்து எஞ்சிய அரிசி தொகை கிடைக்கப்பெறும் எனவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், “அரசாங்கம் சார்பில் அரிசி இறக்குமதி செய்வதற்காக பொறுப்பளிக்கப்பட்ட அரச வர்த்தக கூட்டுத்தாபனம் மற்றும் சதொச நிறுவனத்தின் செயற்பாடுகளால் இவ்வாறு அரிசி இறக்குமதியில் தாமதம் ஏற்படவில்லை.

விநியோகஸ்தர்கள் எதிர்நோக்கிய சிக்கல் காரணமாகவே, அரசாங்கம் இறக்குமதி செய்வதற்கு எதிர்பார்த்த அளவு அரிசியை, இலக்கு வைக்கப்பட்ட காலத்தினுள் இறக்குமதி செய்ய முடியாமல் போனது.” என தெரிவித்தார்.

இதேவேளை, அரசாங்கத்தினால் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு விலைக்கு சந்தையில் அரிசியை பெற முடியாததுள்ளதாக நுகர்வோர் குற்றஞ்சாட்டுகின்றனர்.

மேலும், இறக்குமதி செய்யப்படும் அரிசிக்கான வரியை நீக்குவதற்கு அல்லது கட்டுப்பாட்டு விலையை நீக்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வர்த்தகர்கள் கோருகின்றனர்.

அத்துடன், இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் அரிசி 220 ரூபாவுக்கே தங்களுக்கு வழங்கப்படுவதாகவும் அதனை அரசாங்கத்தின் கட்டுப்பாட்டு விலைக்கு விற்பனை செய்வது சிரமம் எனவும் வர்த்தகர்கள் கூறுகின்றனர்.

இந்தநிலையில், கட்டுப்பாட்டு விலையில் மாற்றம் மேற்கொள்வது தொடர்பான அரசாங்கம் எந்தவொரு கலந்துரையாடலையும் முன்னெடுக்கவில்லை என அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...