18 27
இலங்கைசெய்திகள்

பாதாள உலகக் குழு செயற்பாடுகள் தொடர்பாக அரசாங்கத்தின் நிலைப்பாடு

Share

பாதாள உலக நடவடிக்கைகள் மீண்டும் தலைதூக்குவதைத் தடுக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ உறுதியளித்துள்ளார்.

அமைச்சரவை செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றிய ஜயதிஸ்ஸ, இந்தப் பிரச்சினையை திறம்பட நிவர்த்தி செய்வதற்கு பாதுகாப்புப் படையினர் அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக குறிப்பிட்டுள்ளார்.

ஒரு அரசாங்கமாக, பாதாள உலகத்தை அடக்குவதற்கும் போதைப்பொருள் கடத்தலை எதிர்த்துப் போராடுவதற்கும் தாம் அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

இருப்பினும், குறுகிய கால அல்லது இரண்டு வார நடவடிக்கைகளை மட்டுமே அரசாங்கம் நம்பியிருக்க விரும்பவில்லை என்றும் பாதுகாப்புப் படையினர் இந்த விடயத்தில் முறையாக செயற்பட்டு வருவதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த விடயம் தொடர்பான நடவடிக்கைகள் ஏற்கனவே மேற்கொள்ளப்பட்டு வருவதாக குறிப்பிட்ட நளிந்த ஜயதிஸ்ஸ, அதன் விளைவுகளை எதிர்காலத்தில் காணமுடியும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Share

Recent Posts

தொடர்புடையது
images 3 1
உலகம்செய்திகள்

ஜெர்மனியில் அதிர்ச்சி: மருத்துவமனையில் பணிச்சுமை காரணமாக 10 நோயாளிகளைக் கொலை செய்த ஆண் தாதிக்கு ஆயுள் தண்டனை!

ஜெர்மனியில் உள்ள ஊர்செலன் (Ürselen) நகரில் உள்ள மருத்துவமனை ஒன்றில், 2020ஆம் ஆண்டு பணியில் சேர்ந்த...

images 4 1
செய்திகள்இந்தியா

தமிழ்நாடு இலங்கைத் தமிழர்களுக்கு உடனடியாக வாக்களிக்கும் உரிமை மற்றும் குடியுரிமை வழங்கு: மத்திய அரசுக்கு எஸ். ராமதாஸ் வலியுறுத்தல்!

தமிழ்நாட்டில் பல தசாப்தங்களாக வாழ்ந்து வரும் இலங்கைத் தமிழ் ஏதிலிகளுக்கு (Refugees) வாக்களிக்கும் உரிமை மற்றும்...

MG 8826
இலங்கை

கிளிநொச்சியில் மாவீரர் துயிலும் இல்லக் காணிகளை இராணுவம் விட்டு வெளியேற ஜனாதிபதி உத்தரவு – அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்!

இராணுவ ஆக்கிரமிப்பில் உள்ள மாவீரர் துயிலும் இல்லக் காணிகளை விடுவிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி அநுர...

25 6909cc0a3b1bf
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சங்குப்பிட்டி கொலை: பிரதான சந்தேகநபர் தவில் வித்துவான் அல்ல – இசை வேளாளர் இளைஞர் பேரவை விளக்கம்!

பூநகரி – சங்குப்பிட்டி பாலத்திற்கு அருகில் பெண்ணொருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்துடன் கைது செய்யப்பட்ட பிரதான...