24 15
இலங்கைசெய்திகள்

இலங்கைக்கு படையெடுத்துள்ள சுற்றுலா பயணிகள் : எந்த இடத்திற்கு தெரியுமா !

Share

இலங்கைக்கு படையெடுத்துள்ள சுற்றுலா பயணிகள் : எந்த இடத்திற்கு தெரியுமா !

அம்பாறை, அறுகம் குடா (Arugam Bay) பகுதியிற்கு மீண்டும் அதிகளவிலான சுற்றுலாப் பயணிகள் வருகை தர ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு, குறித்த பகுதியில் பாதுகாப்புக்கு எந்தவொரு அச்சுறுத்தலும் கிடையாது எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

குறித்த விடயத்தை அமைச்சரவைப் பேச்சாளர் நலிந்த ஜயதிஸ்ஸ (Nalinda Jayatissa) தெரிவித்துள்ளார்.

அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் இன்று (19) இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “அறுகம் வளைகுடாவின் நிலைமை சீராக உள்ளது அங்கு பாதுகாப்புக்கு எந்தவொரு அச்சுறுத்தலும் இல்லை.

மீண்டும் அங்கு சுற்றுலாப் பயணிகள் அதிகளவாக வருகை தர ஆரம்பித்துள்ளனர் அத்தோடு பிரித்தானியாவும் தங்கள் நாட்டுப் பிரஜைகளுக்கான பயணத்தடையை தளர்த்தியுள்ளது.

எவ்வாறாயினும், இந்த சம்பவத்துடன் கைது செய்யப்பட்டவர்களிடம் குற்றப்புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் எனவே, விரைவில் இதன் தகவல்களை வெளியிடுவோம்” என அவர் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
articles2F6YDhCB6S7vQDq50VYCJH
இலங்கைசெய்திகள்

கடல்வளம் மற்றும் நீரியல் வளங்கள் பாதுகாப்புக்கு நவீன தொழில்நுட்பம்: அமைச்சர் சந்திரசேகர் உறுதி!

சர்வதேச மீனவர் தினத்தை முன்னிட்டு இன்று கொழும்பு தாமரை கோபுரம் வளாகத்தில் ஆரம்பமான ‘அக்வா பிளான்ட்...

articles2F8wuyhpUNfptSJfoLRtVn
உலகம்செய்திகள்

அணுசக்தி பேச்சுவார்த்தையை மீளத் தொடங்க அமெரிக்காவை வற்புறுத்துமாறு சவுதியிடம் ஈரான் கோரிக்கை!

இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்கள் மற்றும் பொருளாதாரப் பிரச்சினைகளுக்கு மத்தியில் தடைபட்டிருந்த அணுசக்தி பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்க...

25 691962050dadd
செய்திகள்உலகம்

லண்டனில் 20,000 சதுர மீற்றர் பரப்பளவில் புதிய சீனத் தூதரகம்: MI5 எச்சரிக்கைக்கு மத்தியிலும் பிரதமர் ஒப்புதல்!

லண்டனில் 20,000 சதுர மீற்றர் பரப்பளவில் புதிய சீனத் தூதரகத்தை அமைக்கும் திட்டத்திற்கு, இங்கிலாந்துப் பிரதமர்...

image eb1947179c
அரசியல்இலங்கைசெய்திகள்

முதல் சந்தர்ப்பத்திலேயே அரசாங்கத்தைக் கவிழ்ப்போம்: எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து செயல்படும் – நாமல் ராஜபக்ஸ சவால்!

தற்போதைய அரசாங்கத்தை முதல் சந்தர்ப்பத்திலேயே கவிழ்ப்பதற்காக எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து செயல்படும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின்...