26 8
இலங்கைசெய்திகள்

ரணிலுக்கு வாழ்த்து தெரிவிக்க சென்ற அரச உத்தியோகத்தர்களுக்கு நேர்ந்த கதி

Share

ரணிலுக்கு வாழ்த்து தெரிவிக்க சென்ற அரச உத்தியோகத்தர்களுக்கு நேர்ந்த கதி

கடந்த தேர்தல் காலத்தில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வேட்புமனு கையளிக்கும் தினத்தன்று, கடமை நேரத்தில் வாழ்த்து தெரிவிக்க சென்ற டிப்போ முகாமையாளர் உட்பட 6 பேர் பணி இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

குறித்த விடயத்தை களுத்துறை மாவட்ட இலங்கை போக்குவரத்து சபையின் பிராந்திய அலுவலகம் தெரிவித்துள்ளது.

இதன்போது, ஹொரணை டிப்போ முகாமையாளர், உதவி முகாமையாளர் (கட்டுப்பாடு) மற்றும் நான்கு ஊழியர்கள் பணி இடைநிறுத்தப்பட்டுள்ளனர்.

கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு தமது வாழ்த்துக்களையும் ஆதரவையும் தெரிவிக்கும் முகமாக NB 6182 என்ற ஹொரண டிப்போவிற்குச் சொந்தமான பேருந்தில் இவர்கள் 6 பேரும் பொரளை நோக்கி பயணித்ததாக தெரிவிக்கப்படுகிறது.

அவர்கள் அரச பேருந்தில் பொரளைக்கு பயணித்ததாக தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் பின்னரே பணித்தடை விதிக்கப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
பூசா சிறைச்சாலை
இலங்கை

மஹர சிறைச்சாலையில் இருந்து இடம்மாற்றப்பட்ட கைதிகள்.

மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட கலவரத்தினை அடுத்து, அங்கிருந்து 20 கைதிகள் பூசா சிறைச்சாலைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாகச்...

prison
இலங்கை

கட்டுப்பாட்டிற்குள் வந்த பதற்ற நிலை – வெளியேறிய தீயணைப்பு வாகனங்கள்.

மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட பதற்றநிலை தற்போது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதுடன், அனைத்துக் கைதிகளையும் தற்போது அவர்களது சிறைக்...

Scammers
இலங்கை

அமைச்சரின் பெயரில் இடம்பெறும் பாரிய மோசடி.

கைத்தொழில் மற்றும் தொழில்முனைவோர் அபிவிருத்தி பிரதி அமைச்சர் சத்துரங்க அபேசிங்க பிரதி அமைச்சரை போல் ஆள்மாறாட்டம்...

Featured
இலங்கை

மஹர சிறையில் தற்போதைய நிலை .

ராகம பொலிஸ் எல்லைக்குட்பட்ட மஹர சிறைச்சாலையைச் சுற்றியுள்ள A, 246/கண்டலியத்த பாலுவ – மேற்கு, 246/C...