26 8
இலங்கைசெய்திகள்

ரணிலுக்கு வாழ்த்து தெரிவிக்க சென்ற அரச உத்தியோகத்தர்களுக்கு நேர்ந்த கதி

Share

ரணிலுக்கு வாழ்த்து தெரிவிக்க சென்ற அரச உத்தியோகத்தர்களுக்கு நேர்ந்த கதி

கடந்த தேர்தல் காலத்தில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வேட்புமனு கையளிக்கும் தினத்தன்று, கடமை நேரத்தில் வாழ்த்து தெரிவிக்க சென்ற டிப்போ முகாமையாளர் உட்பட 6 பேர் பணி இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

குறித்த விடயத்தை களுத்துறை மாவட்ட இலங்கை போக்குவரத்து சபையின் பிராந்திய அலுவலகம் தெரிவித்துள்ளது.

இதன்போது, ஹொரணை டிப்போ முகாமையாளர், உதவி முகாமையாளர் (கட்டுப்பாடு) மற்றும் நான்கு ஊழியர்கள் பணி இடைநிறுத்தப்பட்டுள்ளனர்.

கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு தமது வாழ்த்துக்களையும் ஆதரவையும் தெரிவிக்கும் முகமாக NB 6182 என்ற ஹொரண டிப்போவிற்குச் சொந்தமான பேருந்தில் இவர்கள் 6 பேரும் பொரளை நோக்கி பயணித்ததாக தெரிவிக்கப்படுகிறது.

அவர்கள் அரச பேருந்தில் பொரளைக்கு பயணித்ததாக தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் பின்னரே பணித்தடை விதிக்கப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
15 6
உலகம்செய்திகள்

அமெரிக்க உளவுத்தகவல் கசிவு! விசாரணைக்கு தயாராகும் ட்ம்பின் ஆதரவாளர்

ஈரானின் அணுசக்தி தளங்கள் முழுமையாக அழிக்கப்படவில்லை என்று அமெரிக்க உளவுத்துறையின் முதற்கட்ட மதிப்பீட்டில் வெிளியடப்பட்டமைக்கு மத்திய...

16 6
இந்தியாசெய்திகள்

41 ஆண்டுகளுக்குப் பின்னர் விண்வெளி சென்ற இந்தியா வீரர்

இந்தியாவிலிருந்து விண்வெளிக்கு 41 ஆண்டுகளுக்கு பின்னர் விண்வெளி வீரர்களில் ஒருவரான சுபான்ஷு சுக்லா அனுப்பப்பட்டுள்ளார். மனிதர்களை...

14 6
இலங்கைசெய்திகள்

இஸ்ரேலின் ஜனநாயக விரோத செயற்பாடு: விமல் வீரவன்சவின் குற்றச்சாட்டு

அமெரிக்காவின் முறையற்ற செயற்பாட்டை கண்டிக்கும் தற்றுணிவு அரசாங்கத்துக்கு கிடையாது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விமல்...

12 9
இலங்கைசெய்திகள்

இலங்கையின் நல்லிணக்க செயற்பாடுகளுக்கு ஐ.நா.மனித உரிமைகள் ஆணையாளர் பாராட்டு!

இலங்கையின் நல்லிணக்க செயற்பாடுகள் குறித்து ஐ.நா.மனித உரிமைகள் ஆணையாளர் பாராட்டுத் தெரிவித்துள்ளார். இலங்கைக்கு வருகை தந்துள்ள...