21 14
இலங்கைசெய்திகள்

இன்று அதிகாலை துயரம் : தொடருந்து மோதி குடும்பஸ்தர் உயிரிழப்பு

Share

இன்று அதிகாலை துயரம் : தொடருந்து மோதி குடும்பஸ்தர் உயிரிழப்பு

இன்று வியாழக்கிழமை (19) அதிகாலைவேளை தொடருந்து மோதி குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

திம்புள்ள – பத்தனை காவல்துறை பிரிவிற்குட்பட்ட கொட்டகலை பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் உயிரிழந்தவர் கொட்டகலை கங்கைபுரத்தை சேர்ந்த வெள்ளசாமி ஜெயகுமார் (வயது – 40) என்ற ஒரு பிள்ளையின் தந்தை என காவல்துறையினரால் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

கொட்டகலை தொடருந்து நிலையத்திற்கு அருகாமையில் கொழும்பில்(colombo) இருந்து பதுளை(badulla) நோக்கி சென்று கொண்டிருந்த இரவு நேர தொடருந்தில் மோதுண்டு குறித்த நபர் உயிரிழந்துள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்தவரின் சடலம் கொட்டகலை தொடருந்து நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டு வைத்திய பரிசோதனைக்காக டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்தியசாலைக்கு அனுப்புவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக தொடருந்து நிலையத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

குறித்த நபர் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது தொடருந்தில் மோதுண்டு இறந்தாரா? என்பது தொடர்பாக பத்தனை காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Share
தொடர்புடையது
body 4
இலங்கை

குளியலறையில் மீட்கப்பட்ட சடலம் – தொடரும் விசாரணைகள்.

காலி, கராப்பிட்டிய – மாயிடிபே பகுதியில் உள்ள வீடொன்றின் குளியலறையில் இருந்து உருக்குலைந்த நிலையில் ஆண்...

Fire Breaks 1
இலங்கை

கொழும்பில் மாத்திரம் இத்தனை தீ விபத்துக்களா?

ஜனவரி முதல் இதுவரையான காலப்பகுதியில் கொழும்பு உட்பட புறநகர் பகுதிகளில் மட்டும் 258 தீ விபத்து...

பசில்
இலங்கை

பசில் விவகாரம் – சர்வதேச காவல்துறையினை நாடும் நீதித்துறை

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச, அமெரிக்காவில் உள்ள நிலையில் அமெரிக்க நீதிமன்ற உத்தரவுகளின் பிரகாரம் நாட்டிற்கு...

body 3
இலங்கை

மகாவலி ஆற்றில் இருந்து சடலம் ஒன்று மீட்பு.

கம்பளை காவல்துறைப் பிரிவுக்கு உட்பட்ட போத்தலப்பிட்டிய பாத்திமா காடன் பகுதிக்கு அருகில் உள்ள மகாவலி ஆற்றில்...