13 20
உலகம்செய்திகள்

உக்ரைன் போரில் கொல்லப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட வடகொரிய படையினர்

Share

உக்ரைன் போரில் கொல்லப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட வடகொரிய படையினர்

உக்ரைன்(ukraine) போரில் ஈடுபடுவதற்காக ரஷ்யாவுடன்(russia) இணைந்துள்ள வட கொரிய(north korea) படையினரில் சுமார் 100 பேர் கொல்லப்பட்டுள்ளதாக தென்கொரியா தெரிவித்துள்ளது.

தென்கொரிய தேசிய புலனாய்வு சேவையால் அந்நாட்டு நாடாளுமன்றத்திற்கு விளக்கமளிக்கப்பட்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய லீ சுங்-க்வோன் மேலும் 1,000 பேர் காயமடைந்துள்ளனர் என்றார்.

உயிரிழந்தவர்களில் உயர்மட்ட அதிகாரிகளும் உள்ளடங்குவதாகவும், துருப்புக்களுக்கு நிலப்பரப்பு பற்றிய பரிச்சயம் இல்லாமை மற்றும் ஆளில்லா விமான தாக்குதல்களை எதிர்கொள்ளும் திறன் இல்லாமை காரணமாக இந்த இழப்பு ஏற்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

உக்ரைனில் வட கொரியாவின் உயிரிழப்புகள் பற்றிய முதல் அறிக்கை இந்த வார தொடக்கத்தில் வந்தது.

ரஷ்யாவின் போர் முயற்சிகளுக்கு உதவ வடகொரியா கடந்த ஒக்டோபரில் 10,000 துருப்புக்களை அனுப்பியதாக தகவல் வெளியானது.

கடந்த சில மாதங்களாக வடகொரியாவுடனான உறவை ரஷ்யா வலுப்படுத்தி வருகிறது.

திங்களன்று அமெரிக்க பென்டகன் செய்தித் தொடர்பாளர் ஒருவர் உக்ரைன் போரில் வட கொரியர்கள் கொல்லப்பட்டதாகக் கூறியபோதிலும் எண்ணிக்கையை வெளியிடவில்லை.எனினும் ஒரு நாள் கழித்து பெயரிட விரும்பாத ஒரு அமெரிக்க அதிகாரி “பல நூற்றுக்கணக்கானவர்கள்” கொல்லப்பட்டனர் அல்லது காயமடைந்தனர் என்று கூறினார்.

வட கொரிய துருப்புக்கள், அவர்களில் எவருக்கும் எந்த முந்தைய போர் அனுபவமும் இல்லை, அவர்கள் முதல் வாரங்களை ரஷ்யாவில் பயிற்சியிலும் பின்னர் களத்திலும் கழித்ததாக நம்பப்படுகிறது.

கடந்த ஓகஸ்ட் மாதம் நடந்த திடீர் ஊடுருவலின் போது உக்ரைனால் கைப்பற்றப்பட்ட ரஷ்யாவின் குர்ஸ்க் பகுதியை மீண்டும் கைப்பற்றும் நோக்குடன் நடத்தப்பட்ட தாக்குதலில் இந்த உயிரிழப்புகள் ஏற்பட்டதாக கருதப்படுகிறது.

கடந்த சனிக்கிழமை, உக்ரைனிய ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி(Volodymyr Zelensky), குர்ஸ்க் மீதான தாக்குதல்களில் “கணிசமான எண்ணிக்கையிலான வட கொரியர்களை” ரஷ்யா பயன்படுத்தத் தொடங்கியுள்ளதாகக் கூறினார்.

Share

Recent Posts

தொடர்புடையது
GGw2UsoWoAAu19A scaled 1
செய்திகள்அரசியல்இலங்கை

மொட்டு கட்சியில் இருந்து விலகினார் சோமரதன தேரர்! – திஸ்ஸகுட்டி ஆராச்சியின் போக்கிற்கு எதிர்ப்பு!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அநுராதபுர மாவட்டத் தலைவர் திஸ்ஸகுட்டி ஆராச்சியின் தன்னிச்சையான செயற்பாடுகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து,...

images 15
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலவச விசா வழங்குவதில் சட்டத் தடை! – தனியார் நிறுவன ‘விசா டீல்’ வழக்கால் முட்டுக்கட்டை என ருவான் ரணசிங்க தகவல்!

இலங்கைக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளுக்கு இலவச விசா வழங்கும் திட்டத்தைச் செயல்படுத்துவதில் பாரிய சட்டச்...

1996569 stone quarry
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பண்டாரவளையில் அதிர்ச்சி: வெடிவைத்தபோது பாறைகள் சரிந்து விபத்து! – இடிபாடுகளுக்குள் சிக்கிய இருவரை மீட்கப் போராட்டம்!

பண்டாரவளை – மாபிட்டிய பகுதியில் அமைந்துள்ள கல் உடைக்கும் குவாரி ஒன்றில் இன்று காலை இடம்பெற்ற...

MediaFile 1 1
செய்திகள்உலகம்

குற்றங்களுக்கு வயது தடையில்லை! – ஆர்ஜென்டீனாவில் சிறார் குற்றவாளிகளுக்கான வயது 14 ஆகக் குறைப்பு; புதிய சட்டம் நிறைவேற்றம்!

ஆர்ஜென்டீனாவில் சிறார் குற்றவாளிகளாகக் கருதப்படும் குறைந்தபட்ச வயது வரம்பை 16-லிருந்து 14 ஆகக் குறைக்கும் வரலாற்றுச்...