28 8
இலங்கைசெய்திகள்

பல்கலைக்கழகத்தில் செலுத்திய ஊசி: மாணவர்களுக்கு ஏற்பட்ட நிலை

Share

பல்கலைக்கழகத்தில் செலுத்திய ஊசி: மாணவர்களுக்கு ஏற்பட்ட நிலை

சப்ரகமுவ பல்கலைக்கழக(university of sabaragamuwa) விவசாய பீடத்தின் இரண்டாம் வருட மாணவர்களுக்கு பல்கலைக்கழக மருத்துவ நிலையத்தினால் வழங்கப்பட்ட ஊசியால் ஏற்பட்ட ஒவ்வாமை காரணமாக இன்று (17) பிற்பகல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

06 மாணவிகளும் ஒரு மாணவனும் என ஏழு மாணவர்களே பெலிஹுல் ஓயா பிராந்திய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களாவர்.

அவர்களில் மூவர் மேலதிக சிகிச்சைக்காக பலாங்கொடை ஆரம்ப வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக சமனல ஏரி காவல்துறையினர் தெரிவித்தனர்.

இன்று (17) பிற்பகல் பல்கலைக்கழக மருத்துவமனையில் தடுப்பூசிகளை செலுத்தியதன் காரணமாகவே இந்த ஒவ்வாமை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெலிஹுல் ஓயா மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் மாணவர்களை பார்வையிட வந்த சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் சிரேஷ்ட பேராசிரியர் சுனில் சாந்தவிடம் இது தொடர்பாக ஊடகமொன்று கேட்டபோது,சம்பவம் தொடர்பில் பல்கலைக்கழகத்திற்குள் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

Share
தொடர்புடையது
Murder Recovered Recovered Recovered 19
இலங்கைசெய்திகள்

கஹவத்தையில் கடும் பதற்றம்! பொதுமக்கள் மீது கண்ணீர் புகைத் தாக்குதல் நடத்தும் பொலிஸார்

கஹவத்தையில் பொலிஸார் மற்றும் பொதுமக்களுக்கு இடையில் ஏற்பட்ட குழப்பநிலை காரணமாக அங்கு கடும் பதற்றமான சூழல்...

Murder Recovered Recovered Recovered 17
இலங்கைசெய்திகள்

எமக்கு தொடர்பில்லை! செம்மணி அவலத்தில் இருந்து பொறுப்பு துறக்கும் அமைச்சர்

செம்மணி புதைகுழி சம்பவங்களுக்கும் தனது கட்சிக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம்...

9
சினிமாசெய்திகள்

பிக்பாஸ் புகழ் ஷாரிக்கிற்கு குழந்தை பிறந்தது.. அவரே வெளியிட்ட குழந்தையின் வீடியோ

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வந்தவர்கள் உமா ரியாஸ் மற்றும் ரியாஸ் கான் ஜோடி....

8
சினிமாசெய்திகள்

சிவகார்த்திகேயனுடன் மோதும் முன்னணி நடிகர்.. பிரம்மாண்டமாக ஒரே நாளில் வெளியாகும் இரண்டு படங்கள்

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் மதராஸி. இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன்...