28 8
இலங்கைசெய்திகள்

பல்கலைக்கழகத்தில் செலுத்திய ஊசி: மாணவர்களுக்கு ஏற்பட்ட நிலை

Share

பல்கலைக்கழகத்தில் செலுத்திய ஊசி: மாணவர்களுக்கு ஏற்பட்ட நிலை

சப்ரகமுவ பல்கலைக்கழக(university of sabaragamuwa) விவசாய பீடத்தின் இரண்டாம் வருட மாணவர்களுக்கு பல்கலைக்கழக மருத்துவ நிலையத்தினால் வழங்கப்பட்ட ஊசியால் ஏற்பட்ட ஒவ்வாமை காரணமாக இன்று (17) பிற்பகல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

06 மாணவிகளும் ஒரு மாணவனும் என ஏழு மாணவர்களே பெலிஹுல் ஓயா பிராந்திய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களாவர்.

அவர்களில் மூவர் மேலதிக சிகிச்சைக்காக பலாங்கொடை ஆரம்ப வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக சமனல ஏரி காவல்துறையினர் தெரிவித்தனர்.

இன்று (17) பிற்பகல் பல்கலைக்கழக மருத்துவமனையில் தடுப்பூசிகளை செலுத்தியதன் காரணமாகவே இந்த ஒவ்வாமை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெலிஹுல் ஓயா மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் மாணவர்களை பார்வையிட வந்த சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் சிரேஷ்ட பேராசிரியர் சுனில் சாந்தவிடம் இது தொடர்பாக ஊடகமொன்று கேட்டபோது,சம்பவம் தொடர்பில் பல்கலைக்கழகத்திற்குள் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

Share
தொடர்புடையது
Histopathological examination
இலங்கை

மரணத்தில் சந்தேகம் – விசாரணை செய்ய கோரும் தந்தை.

இரத்தினபுரி பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்த 21 வயதுடைய யுவதியின் மரணத்தில்...

chemmani 22
இலங்கை

செம்மணி மனித புதைகுழியினை பார்வியிட்ட ஐரோப்பிய தூதுக்குழுவினர்.

இன்று, யாழ்ப்பாணம் – செம்மணி, சித்தப்பாத்தி இந்து மயானத்தில் அமைந்துள்ள மனித புதைக்குழிகளை, ஐரோப்பிய ஒன்றிய...

dead body
இலங்கை

பாடசாலை செல்லும்போது ஆறு வயது பாலகிக்கு நேர்ந்த கதி.

இன்று, மாத்தறை, திக்வெல்ல – கொடஉட பகுதியில் 6 வயது சிறுமி ஒருவர் தனது தாயார்...

Lanka Turkey
இலங்கை

துருக்கித் தூதுவரை சந்தித்த சர்வஜன அதிகாரம் கட்சியின் தலைவர்.

சர்வஜன அதிகாரம் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினர் திலித் ஜயவீர மற்றும் சர்வஜன அதிகார கட்சியின்...