28 8
இலங்கைசெய்திகள்

பல்கலைக்கழகத்தில் செலுத்திய ஊசி: மாணவர்களுக்கு ஏற்பட்ட நிலை

Share

பல்கலைக்கழகத்தில் செலுத்திய ஊசி: மாணவர்களுக்கு ஏற்பட்ட நிலை

சப்ரகமுவ பல்கலைக்கழக(university of sabaragamuwa) விவசாய பீடத்தின் இரண்டாம் வருட மாணவர்களுக்கு பல்கலைக்கழக மருத்துவ நிலையத்தினால் வழங்கப்பட்ட ஊசியால் ஏற்பட்ட ஒவ்வாமை காரணமாக இன்று (17) பிற்பகல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

06 மாணவிகளும் ஒரு மாணவனும் என ஏழு மாணவர்களே பெலிஹுல் ஓயா பிராந்திய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களாவர்.

அவர்களில் மூவர் மேலதிக சிகிச்சைக்காக பலாங்கொடை ஆரம்ப வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக சமனல ஏரி காவல்துறையினர் தெரிவித்தனர்.

இன்று (17) பிற்பகல் பல்கலைக்கழக மருத்துவமனையில் தடுப்பூசிகளை செலுத்தியதன் காரணமாகவே இந்த ஒவ்வாமை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெலிஹுல் ஓயா மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் மாணவர்களை பார்வையிட வந்த சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் சிரேஷ்ட பேராசிரியர் சுனில் சாந்தவிடம் இது தொடர்பாக ஊடகமொன்று கேட்டபோது,சம்பவம் தொடர்பில் பல்கலைக்கழகத்திற்குள் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

Share
தொடர்புடையது
Untitled 68
செய்திகள்இலங்கைபிராந்தியம்

காலி – தெலிக்கடையில் பயங்கரம்: ஆணும் பெண்ணும் வெட்டிக் கொலை – ஓய்வுபெற்ற இராணுவ வீரர் கைது!

காலி, தெலிக்கடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் இன்று (ஏப்ரல் 03, 2026) அதிகாலை இடம்பெற்றதாகக் கூறப்படும்...

Untitled 67
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கைச் சுற்றுலாவில் 19.7% சரிவு: மார்ச் மாதத்தில் வருகை தந்த பயணிகளின் எண்ணிக்கை வெளியீடு!

இலங்கைச் சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை (SLTDA) வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கையின்படி, 2026 மார்ச் மாதத்தில்...

Untitled 66
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சம்பா அரிசி தட்டுப்பாட்டுக்குத் தீர்வு: பொன்னி மற்றும் கீரி பொன்னி இறக்குமதிக்கு அரசாங்கம் அனுமதி!

இலங்கையில் நிலவும் சம்பா மற்றும் கீரி சம்பா அரிசி தட்டுப்பாட்டைப் போக்கி, சந்தையை நிலைப்படுத்துவதற்காக விசேட...

Untitled 65
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சிலாபத்தில் பாரிய இணையவழி நிதி மோசடி: 147 வெளிநாட்டுப் பிரஜைகள் அதிரடி கைது!

இலங்கையின் சிலாபம், இரணாவில பகுதியில் உள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்து, சர்வதேச ரீதியிலான ஒழுங்கமைக்கப்பட்ட...