23 10
இலங்கைசெய்திகள்

இலங்கைக்கு சுற்றுலா வந்த ரஷ்ய குடும்பத்தை அள்ளிச் சென்ற கடல் அலை

Share

இலங்கைக்கு சுற்றுலா வந்த ரஷ்ய குடும்பத்தை அள்ளிச் சென்ற கடல் அலை

இலங்கைக்கு(sri lanka) சுற்றுலா வந்த ரஷ்ய குடும்பம் நீராடச் சென்ற நிலையில் கடல் அலை இழுத்துச் சென்ற சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

ரஷ்யாவைச்(russia) சேர்ந்த 40 வயதுடைய ஆண் ஒருவரும் அவருடைய 39 வயதுடைய மனைவி மற்றும் 07 மற்றும் 13 வயதுடைய இரு பெண் பிள்ளைகள் இலங்கைக்கு சுற்றுலா வந்துள்ளனர்.

இவ்வாறு வந்த இவர்கள் ஹிக்கடுவை கடற்கரையில் நீராடச் சென்றுள்ளனர்.இதன்போது அவர்கள் நால்வரையும் கடல் அலை இழுத்துச் சென்றுள்ளது.

எனினும் அங்கு கடமையில் இருந்த ஹிக்கடுவை காவல்துறை உயிர்காப்பு பிரிவு அதிகாரிகள் உடனடியாக செயற்பட்டு குறித்த நால்வரையும் மீட்டு கரைக்கு கொண்டு வந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

ஹிக்கடுவை காவல் நிலையத்திற்குட்பட்ட காவல்துறை உயிர்காப்பு பிரிவின் காவல்துறை பரிசோதகர் ஹேவகே, காவல்துறை கான்ஸ்டபிள் 96793 ஏக்கநாயக்க, காவல்துறை கான்ஸ்டபிள் 102748 திஸாநாயக்க மற்றும் காவல்துறை கான்ஸ்டபிள் 105456 ஜயசிங்க ஆகியோரால் இவர்கள் காப்பாற்றப்பட்டுள்ளனர்.

Share
தொடர்புடையது
rent 1200px 05 09 23
செய்திகள்இலங்கை

50 ஆண்டுகால வாடகைச் சட்டத்தில் மாற்றம்: புதிய குடியிருப்பாளர்கள் பாதுகாப்புச் சட்டமூலம் குறித்து மக்கள் கருத்து கோரல்!

இலங்கையில் 1972 ஆம் ஆண்டு முதல் நடைமுறையிலுள்ள பழைய வாடகைச் சட்டத்தை நீக்கிவிட்டு, உரிமையாளர் மற்றும்...

26 6981e649399d3
செய்திகள்இலங்கை

பெண் காவலரின் கழுத்தை அறுத்துக் கொலை செய்த கான்ஸ்டபிளுக்கு மரண தண்டனை!

சுமார் 12 ஆண்டுகளுக்கு முன்பு கொழும்பு கோட்டை பகுதியில் பெண் காவலர் ஒருவரைக் கொடூரமாகக் கொலை...

20260203 141546
செய்திகள்அரசியல்இலங்கை

இனவாதமற்ற நாடு என்பது அரசின் போலிப் பிரச்சாரம்! – சுதந்திர தினத்தைக் கரி நாளாக அனுஷ்டிக்க ரெலோ தீர்மானம்.

தற்போதைய அரசாங்கம் முன்னெடுத்து வரும் “இனவாதமற்ற, மதவாதமற்ற நாடு” என்ற கோஷம் ஒரு போலிப் பிரச்சாரம்...

1006733 stalin
செய்திகள்இலங்கை

தமிழக மீனவர்களின் அத்துமீறலைத் தடுக்க ஸ்டாலின் நினைத்தால் முடியும்! – வடமாகாண கடற்றொழிலாளர் இணையம் காட்டம்.

இலங்கைக் கடல் எல்லைக்குள் இந்தியக் கடற்றொழிலாளர்கள் அத்துமீறி நுழைந்து முன்னெடுக்கும் அடாவடித்தனங்கள் குறித்து அரசாங்கமும், கடற்றொழில்...