25 8
உலகம்செய்திகள்

ரஷ்யாவின் முக்கிய எண்ணெய் விநியோக நிலையத்தை தாக்கிய உக்ரைன் டிரோன்கள்

Share

ரஷ்யாவின் முக்கிய எண்ணெய் விநியோக நிலையத்தை தாக்கிய உக்ரைன் டிரோன்கள்

ரஷ்ய (Russia) துருப்புக்களுக்கு எரிபொருள் விநியோகத்தின் முக்கிய ஆதாரமாக இருக்கும் எண்ணெய் நிலையத்தை டிரோன்கள் மூலம் உக்ரைன் (Ukraine) தாக்கியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ரஷ்யாவின் ஓரியோல் பிராந்தியத்தில் உள்ள Steel Horse எனப்படும் எண்ணெய் உற்பத்தி கட்டுப்பாட்டு நிலையத்த்தை குறிவைத்து உக்ரைனிய ஆளில்லா விமானங்கள் நள்ளிரவில் தாக்குதல் நடத்தியதாக உக்ரைன் இராணுவம் தெரிவித்துள்ளது.

இந்த எண்ணெய் நிலையம் உக்ரைன் எல்லையிலிருந்து சுமார் 170 கிமீ தொலைவிலுள்ளது இந்த தாக்குதலில் பெரும் தீவிபத்து ஏற்பட்டதாக கூறப்பட்டாலும் எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை என ரஷியாவின் ஓரியோல் மாகாண ஆளுநர் ஆண்ட்ரே கிளிச்கோ தெரிவித்துள்ளார்.

தாக்குதலின் போது 11 டிரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு முன், உக்ரைன் டிரோன்கள் ரஷ்ய எண்ணெய் வசதிகளை அடிக்கடி இலக்கு வைப்பது இந்த தாக்குதலின் மூலம் தெளிவாகிறது.

இதனை உக்ரைன் அதன் இராணுவ இலக்காக கருதுகிறது ஆனால், ரஷ்யா இதைப் தீவிரவாத செயல்கள் என வகைப்படுத்துகிறது.

இதைத் தொடர்ந்து, உக்ரைனின் இராணுவ நடவடிக்கைகள் ரஷ்யாவின் எண்ணெய் நிலையங்களை தாக்கும் நோக்குடன் அதிகரித்துள்ளன குறிப்பாக, ரஷ்யாவின் குர்ச்க் பகுதியில் உள்ள சில கிராமங்கள் தற்போது உக்ரைன் கட்டுப்பாட்டில் உள்ளன.

இந்த தாக்குதலால் ரஷ்யாவின் எண்ணெய் விநியோகத்தில் தாக்கம் ஏற்படும் என கணிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
world 108
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தொழிலதிபர்களுக்கு விசேட எரிபொருள் ஒதுக்கீடு: அரசாங்கத்தின் புதிய திட்டம் குறித்து அறிவிப்பு!

இலங்கையிலுள்ள பெரிய மற்றும் நடுத்தர அளவிலான தொழிலதிபர்களின் கோரிக்கையை ஏற்று, அவர்களின் செயல்பாடுகளைத் தடையின்றி முன்னெடுப்பதற்காக...

world 107
செய்திகள்உலகம்

ஈரான் பேச்சுவார்த்தை முறிவு: கவலையின்றி UFC சண்டையைக் கண்டுகளித்த டொனால்ட் டிரம்ப்!

மத்திய கிழக்கில் அமைதியை ஏற்படுத்துவதற்காக ஈரானுடன் இஸ்லாமாபாத்தில் நடத்தப்பட்ட மிக முக்கியமான அமைதிப் பேச்சுவார்த்தைகள் எவ்வித...

world 106
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பூசா சிறையிலிருந்து வெலிசராவுக்கு மாற்றப்பட்ட 7 முக்கிய பாதாள உலகக் கும்பல் தலைவர்கள்!

இலங்கையில் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல்களைச் சேர்ந்த ஏழு முக்கிய தலைவர்கள், பூசா உயர் பாதுகாப்புச் சிறையிலிருந்து...

world 101
உலகம்செய்திகள்

அமெரிக்கா – ஈரான் பேச்சுவார்த்தை முறிவு: போர் நிறுத்தத்தைத் தொடர ஆஸ்திரேலியா வலியுறுத்தல்!

இஸ்லாமாபாத்தில் அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையே நடைபெற்ற அமைதிப் பேச்சுவார்த்தைகள் எவ்வித உடன்பாடும் இன்றி முடிவடைந்ததைத்...