accident 8 750x375 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வடமராட்சி விபத்து..! – குடும்பஸ்தர் பலி

Share

யாழ்ப்பாணம் வடமராட்சி கப்புது வீதி பகுதியில் நேற்றிரவு இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த நபர் தனது தாயாரின் வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது, குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

பால வேலைக்காக வீதியில் வெட்டப்பட்ட கிடங்கில், மோட்டார் சைக்கிள் வேகக் கட்டுப்பாட்டை இழந்த நிலையில், பால வேலைக்காக குறுக்காக கட்டப்பட்ட சமிசையையும் தாண்டி பாலத்திற்குள் விழுந்து விபத்திற்குள்ளாகியுள்ளது.

சம்பவத்தில் பொன்னுத்துரை காண்டீபன் (வயது-40) எனும் இரண்டு பிள்ளைகளின் தந்தையே உயிரிழந்துள்ளார் என தெரியவந்துள்ளது.

விபத்துக்குள்ளான நபர், அவசர ஆம்புலன்ஸ் சேவை ஊடாக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற நிலையில், உயிரிழந்துள்ளார்.

இது தொடர்பான விசாரணகளை நெல்லியடி பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

IMG 20211026 WA0001 300x225 1

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...