14 13
இலங்கைசெய்திகள்

குழந்தை பிறப்பில் வீழ்ச்சி : ஜப்பான் அரசின் அதிரடி நடவடிக்கை

Share

குழந்தை பிறப்பில் வீழ்ச்சி : ஜப்பான் அரசின் அதிரடி நடவடிக்கை

ஜப்பான் (japan)நாட்டில் குழந்தை பிறப்பு விகிதம் குறைந்து கொண்டே வந்ததை அடுத்து, அந்நாடு சில அதிரடி சலுகைகளை வழங்கி உள்ளதாக கூறப்படுகிறது.

ஜப்பான் நாட்டில் கடந்த ஆண்டு வரலாறு காணாத அளவில் குழந்தை பிறப்பு விகிதம் வீழ்ச்சி அடைந்துள்ளதாகவும், 2022 ஆம் ஆண்டு பதிவானதை விடவும் கடந்த ஆண்டு பிறப்பு விகிதம் 5 சதவீதத்திற்கு மேல் குறைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதனை அடுத்து, குழந்தை பிறப்பு விகிதத்தை அதிகரிக்க வாரத்தில் நான்கு நாட்கள் மட்டுமே வேலை என்ற நடைமுறையை ஜப்பான் அரசு கொண்டுவந்துள்ளது.

அரசு அலுவலகங்களில் முதல் கட்டமாக இந்த சலுகை கொண்டு வரப்பட உள்ளதாகவும், இதனை அடுத்து படிப்படியாக தனியார் நிறுவனங்களுக்கும் இந்த சலுகை கொண்டு வரப்படும் என்றும் கூறப்படுகிறது.

2025 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்பட இருப்பதாகவும், இதனால் ஊழியர்கள் குடும்பத்துடன் அதிக நேரம் செலவிடுவார்கள் என்பதால் உடல் மற்றும் மன அளவில் ஆரோக்கியமாக இருப்பார்கள் என்றும், இந்த சலுகை காரணமாக அடுத்த ஆண்டு குழந்தை பிறப்பு விகிதம் அதிகரிக்கும் என்றும் கூறப்படுகிறது

ஜப்பான் நாட்டில் கடந்த சில ஆண்டுகளாக மக்கள் திருமண உறவில் மற்றும் குழந்தை பெறுவதில் நாட்டம் இல்லாதவர்களாக மாறி வருவதாக ஆய்வு அறிக்கை ஒன்று தெரிவித்துள்ளது.

Share

Recent Posts

தொடர்புடையது
MediaFile 4 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இன்று மகா சிவராத்திரி! – சிவாலயங்களில் குவியும் பக்தர்கள்; இரவு முழுவதும் விழித்திருந்து வழிபாடு!

ஆன்மீக ரீதியாகவும் அறிவியல் ரீதியாகவும் மிக முக்கியமான தினமாகக் கருதப்படும் மகா சிவராத்திரி விரதம் இன்று...

MediaFile 4 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அக்குரேகொட படுகொலை: கொலையாளிகளின் கார் மீட்பு! – சட்டத்தரணியின் ‘தரப்பு மாற்றம்’ மரணத்திற்கு காரணமா?

அக்குரேகொட பகுதியில் சட்டத்தரணி மற்றும் அவரது மனைவியைப் படுகொலை செய்யப் பயன்படுத்தப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் கார், காலி...

image 1d03fce287
செய்திகள்இலங்கைபிராந்தியம்

உங்கள் கையெழுத்து உங்கள் உரிமையைக் காக்கும்’: PTA-வை நீக்கக் கோரி வடகிழக்கில் ஒரு லட்சம் கையெழுத்துப் போராட்டம்!

சர்ச்சைக்குரிய பயங்கரவாதத் தடைச்சட்டம் (PTA) மற்றும் புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்ட முன்மொழிவுகளை (ATA) முற்றாக...

image 914163dc5e
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கொழும்பு ஜிந்துபிட்டியில் பயங்கரம்: சிகையலங்கார நிலையத்திற்குள் புகுந்து துப்பாக்கிச் சூடு! 

கொழும்பு, ஜிந்துபிட்டி வரக்கா சந்தி பகுதியிலுள்ள முடியலங்கார நிலையம் (Barber Shop) ஒன்றிற்குள் நேற்றிரவு (14)...