3
இலங்கைசெய்திகள்

யாழில் இளம் தாயொருவர் திடீர் உயிரிழப்பு

Share

யாழில் இளம் தாயொருவர் திடீர் உயிரிழப்பு

யாழ்ப்பாணம் (Jaffna) – வடமராட்சி, அல்வாயில் இளம் தாய் ஒருவர் திடீர் சுகவீனமுற்று உயிரிழந்துள்ளார்.

அல்வாய் கிழக்குப் பகுதியைச் சேர்ந்த செல்வகுமார் நிரோஷா (வயது- 32) என்ற குடும்பப் பெண்ணே இவ்வாறு உயிரிழந்தவராவார்.

வீட்டிலிருந்த போது அவர் திடீர் சுகவீனமுற்றதைத் தொடர்ந்து பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இதையடுத்தே சிகிச்சை பயனளிக்காமல் அவர் உயிரிழந்தார். நெல்லியடிப் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

யாழ். பருத்தித்துறை காவல்துறை பிரிவில் கற்கோவளம் – வராத்துப்பளை பகுதியில் குடும்பப் பெண் ஒருவரின் சடலம் கம்பி வலையால் மூடப்பட்ட பொதுக்கிணற்றுக்குள் இருந்து மீட்கப்பட்டுள்ளது.

தனது தாயாரை நேற்று பிற்பகலில் இருந்து காணவில்லை என அவரது குடும்பத்தினர் தேடிச் சென்ற வேளை குறித்த கம்பி வலையால் மூடிய கிணற்றடிப் பகுதியில் தொலைபேசி சத்தம் ஒலித்த நிலையில் அந்தக் கிணற்றை அவரது மகன் எட்டிப் பார்த்த வேளை சடலம் காணப்பட்டுள்ளது.

இவ்வாறு சடலமாகக் காணப்பட்டவர் மூன்று பிள்ளைகளின் தாயான விமலன் சிந்து என்கின்ற 42 வயதுடைய தாயார் ஆவார்.

இது தொடர்பான தீவிர விசாரணைகளை பருத்தித்துறைப் காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

Share
தொடர்புடையது
advance leval
இலங்கைசெய்திகள்

தரம் 12 பொதுத் தகவல் தொழில்நுட்பப் பரீட்சை ஒத்திவைப்பு: புதிய திகதி அறிவிப்பு!

நாடளாவிய ரீதியில் நிலவிய சீரற்ற காலநிலை காரணமாக ஒத்திவைக்கப்பட்ட தரம் 12 மாணவர்களுக்கான 2025 பொதுத்...

25 69341965c01f0
இலங்கைசெய்திகள்

நவம்பர் புயல்கள் தீவிரமடைய காலநிலை மாற்றமே காரணம்: ஆராய்ச்சியாளர்கள் குழு அறிக்கை!

இலங்கை, இந்தோனேசியா, மலேசியா மற்றும் தாய்லாந்து உள்ளிட்ட பல ஆசிய நாடுகளுக்கு பாரிய அழிவை ஏற்படுத்தி...

1000 F 62831893 ys5pStUNE4HtH0YiblTGtnyZ9o0UO1AC transformed
இலங்கைசெய்திகள்

இயற்கைச் சீற்றத்தால் புத்தளம் உப்பளங்களில் 25,000 மெட்ரிக் டன் உப்பு சேதம்: உற்பத்தியாளர்கள் நிவாரணம் கோரிக்கை!

அண்மையில் ஏற்பட்ட இயற்கைச் சீற்றத்தால் புத்தளம் உப்பளங்களில் சேமித்து வைக்கப்பட்டிருந்த 25,000 மெட்ரிக் தொன்னுக்கும் அதிகமான...

images 10 2
அரசியல்இலங்கைசெய்திகள்

பணச் சலவை வழக்கு: முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அர்ஜுன் மகேந்திரன் உள்ளிட்டோருக்கு மீண்டும் திறந்த பிடியாணை!

பணச் சலவை தொடர்பில் முன்னெடுக்கப்படும் விசாரணைகளுக்கு அமைவாகத் தாக்கல் செய்யப்பட்ட முறைப்பாடு ஒன்றில் சந்தேக நபர்களாகப்...