6 5
இலங்கைசெய்திகள்

குறைக்கப்படாத மின் கட்டணம்: அநுர அரசாங்கத்திற்கு கடும் அழுத்தம்

Share

குறைக்கப்படாத மின் கட்டணம்: அநுர அரசாங்கத்திற்கு கடும் அழுத்தம்

மின்சார கட்டணத்தை குறைக்காமல், தற்போதுள்ள கட்டணத்தை அடுத்த 6 மாதங்களுக்கும் பேண வேண்டும் என இலங்கை மின்சார சபை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிற்கு அறிவித்துள்ள நிலையில் பல்வேறு தரப்புகளில் இருந்தும் குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.

ஒக்டோபர் மாத இறுதியில் முன்வைக்கப்படும் திருத்தத்தின் மூலம் மின்சாரக் கட்டணத்தை 6 வீதத்தால் குறைக்க முடியும் என இலங்கை மின்சார சபை அறிவித்திருந்தும் ஒன்றரை மாதங்களுக்குப் பின்னர் மின்சாரக் கட்டணத்தை குறைக்க முடியாது என மின்சார சபை தெரிவித்துள்ளமை சர்ச்சையை கிளப்பியுள்ளது.

மின்சார கட்டணத்தை மூன்றில் ஒரு பங்காக குறைக்க முடியும் என தற்போதைய ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க ஜனாதிபதித் தேர்தலின் போது மிகத் தெளிவாக தெரிவித்திருந்த பின்னணியில், மின் கட்டணத்தை திருத்த வேண்டாம் என இலங்கை மின்சார சபை தீர்மானித்துள்ளது.

அத்துடன், 2024 செப்டெம்பர் மாதத்திற்குள் மின்சார சபையின் நிகர லாபம் 136 பில்லியனைத் தாண்டியுள்ள பின்னணியிலும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளமை மேலும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.

இதேவேளை, கடந்த பல வாரங்களாக, நீர்மின் நிலையங்களுடன் தொடர்புடைய நீர்த்தேக்கங்கள் நிரம்பி வழிவதால், தினசரி நீர் மின் உற்பத்தி 5500 மெகாவாட் மணிநேரத்தை தாண்டியுள்ளதுடன், எரிபொருள் அடிப்படையிலான மின்சார உற்பத்தி 1.3 சதவீதமாக குறைந்துள்ளது.

இதன்படி, மின்சார சபை 200 பில்லியன் ரூபாவிற்கும் அதிகமான இலாபத்தை ஈட்டியிருப்பதால், மின்சாரக் கட்டணத்தை உடனடியாகக் குறைக்குமாறு கோரி, சமகி கூட்டுத் தொழிற்சங்கமும் நேற்று ஜனாதிபதி அலுவலகத்தில் மகஜர் ஒன்றை கையளித்துள்ளதாக கூறப்படுகிறது.

Share
தொடர்புடையது
Arrested With
இலங்கை

கைது செய்யப்பட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதேச சபை உறுப்பினர்.

ஐக்கிய மக்கள் சக்தியின் அம்பலங்கொட பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் காலி மாவட்ட குற்றப்பிரிவினரால் கைது...

Weapons
இலங்கை

சிறைச்சாலைக்குள் கைப்பற்றப்பட்ட ஆயுதங்கள் – தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட தேங்காய்கள்.

நீர்கொழும்பு சிறையில் நடந்த மோதலின் போது கைதிகள் அதிகாரிகளைத் தாக்கப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் கூர்மையான ஆயுதங்களின்...

ravi karunanayake cry 1
இலங்கை

ரவி கருணநாயக்கவிற்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பாணை.

  இலஞ்சம் ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் இம் மாதம் 17ஆம் திகதி முன்னிலையாகுமாறு, கொழும்பு மாவட்ட...

penson
இலங்கை

வெளிநாடுகளில் பணியாற்றும் இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி தகவல்.

  வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கையர்களுக்காக புதிய ஓய்வூதியத் திட்டத்தை விரைவாகத் தயாரிக்க நடவடிக்கை எடுத்து வருவதாக...