25 4
இலங்கைசெய்திகள்

பதவிக்காலத்தில் சொத்துக் குவிப்பு: முன்னாள் அமைச்சருக்கு எதிராக முறைப்பாடு

Share

பதவிக்காலத்தில் சொத்துக் குவிப்பு: முன்னாள் அமைச்சருக்கு எதிராக முறைப்பாடு

முன்னாள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவின் (nimal sripala de silva) சொத்துக்கள் தொடர்பில் விசாரணை நடத்துமாறு இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

முன்னாள் அமைச்சர் சட்டவிரோதமான முறையில் சொத்துக்களை சம்பாதித்துள்ளதாக தெரிவித்து லஞ்சம், ஊழல் மற்றும் கழிவுகளுக்கு எதிரான குடியுரிமை அமைப்பினால் விசாரணை நடத்துமாறு கோரி முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

நிமல் சிறிபால டி சில்வா, அமைச்சராக இருந்த காலத்தில், தனது மனைவி, தோழி மற்றும் நண்பர்களின் பெயர்களைப் பயன்படுத்தி பெருமளவிலான சட்டவிரோத சொத்துக்களை குவித்துள்ளதாக உரிய முறைப்பாட்டில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

முன்னாள் அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா போக்குவரத்து, துறைமுகங்கள் உட்பட பல்வேறு அமைச்சு பதவிகளை கடந்த அரசாங்க காலத்தின்போது வகித்து வந்தவராவார்.

இதேவேளை வர்த்தக அமைச்சராக கடமையாற்றிய போது சதொச ஊழியர்களை உத்தியோகபூர்வ கடமைகளில் இருந்து நீக்கி அரசியல் நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தியதன் மூலம் அரசாங்கத்திற்கு நஷ்டத்தை ஏற்படுத்தியதாக முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ (Johnston Fernando) மற்றும் மூன்று பிரதிவாதிகளுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
Untitled 1 2
சினிமாசெய்திகள்

ஜனநாயகன் கடைசி படம் இல்லையா? விஜய் பதிலால் குஷியில் ரசிகர்கள்

இன்று நடிகர் விஜய்யின் பிறந்தநாள் என்பதால் அதை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். அவர் ஏற்கனவே அரசியல்...

Untitled 1 1
சினிமாசெய்திகள்

விஜய்க்காக த்ரிஷா போட்ட பதிவு.. வைரலாகும் போட்டோவை பாருங்க

நடிகர் விஜய்க்கு இன்று பிறந்தநாள் என்பதால் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்....

19 1
உலகம்செய்திகள்

டொனால்ட் ட்ரம்பின் நீண்ட கால திட்டம்! குறி வைக்கப்பட்டுள்ள ஈரானின் முக்கிய இடங்கள்

ஒன்று அமைதி, இல்லாவிட்டால் ஈரானுக்கு அழிவு. ஈரானில் இன்னும் பல முக்கிய இடங்களை குறி வைத்துள்ளோம்...

18 2
இலங்கைசெய்திகள்

நாடாளுமன்ற ஊழியர்களுக்கான உணவு கட்டணத்தில் மேற்கொள்ளப்படும் திருத்தம்

நாடாளுமன்ற ஊழியர்களுக்கு விதிக்கப்படும் உணவு கட்டணங்களை திருத்தியமைக்க நாடாளுமன்ற குழு தீர்மானித்துள்ளது. நாடாளுமன்ற குழு கூடியபோது...