20 6
இலங்கைசெய்திகள்

வேலை தருவதாக சமூக வலைத்தளங்களில் பண மோசடி : விடுக்கப்பட்டுள்ள கடும் எச்சரிக்கை

Share

வேலை தருவதாக சமூக வலைத்தளங்களில் பண மோசடி : விடுக்கப்பட்டுள்ள கடும் எச்சரிக்கை

வேலை வழங்குவதாக கூறி சமூக வலைத்தளங்களில் பண மோசடி இடம்பெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த விடயத்தை இலங்கை கணினி அவசர பதில் மன்றத்தின் தகவல் தொழில்நுட்ப பொறியியலாளர் சாருக தமுனுபொல தெரிவித்துள்ளார்.

வேலை அல்லது வேறு நடவடிக்கைகள் தொடர்பில் மக்களின் இரகசிய தகவல் பெறப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்தநிலையில், இதுபோன்ற செய்திகளை நம்பி ஏமாற வேண்டாம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

வாட்ஸ்அப் கணக்குகளை அங்கீகரிக்கப்படாத அணுகல் தொடர்பாக கடந்த வாரம் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

ஹேக்கர்கள் வாட்ஸ்அப் கணக்குகளில் நுழைந்து பெரும்பாலும் நிதி மோசடியில் ஈடுபடுவது தெரியவந்துள்ளதாகவும் இதுபோன்ற சுமார் 74 முறைப்பாடுகள் இதுவரை பதிவாகியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
palansena
இலங்கை

பல்லன்சேன சிறைச்சாலையில் தொடரும் போராட்டம் – அதிகரிக்கப்பட்டது பாதுகாப்பு!

நீர்கொழும்பு, தளுபொத, பல்லன்சேன திறந்தவெளிச் சிறைச்சாலையில் உள்ள கைதிகளின் போராட்டம் தீவிரமடைந்துள்ளமையினால் அங்கு தொடர்ந்தும் பதற்றம்...

parlimen president
இலங்கை

ஜனாதிபதி அநுர குமார திசாநாயகவிடம் ஒப்படைக்கப்பட்ட விசேட அறிக்கை!

நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட வன்முறைச் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்திய குழுவின் அறிக்கை ஜனாதிபதி அநுர...

Laugfs Gas
இலங்கை

லாஃப்ஸ் எரிவாயு விலை ஓகஸ்ட் மாத விலைத்திருத்தங்கள்.

லாஃப்ஸ் எரிவாயு விலையிலும் ஓகஸ்ட் மாதத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட மாட்டாது என அந்நிறுவனம் அறிவித்துள்ளது. அந்த...

wether
இலங்கை

வானிலை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு.

அடுத்துவரும் 36 மணித்தியாலங்களுக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, நாளைய தினம் பல பிரதேசங்களில்...